Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Saturday, June 27, 2015

குரு பெயர்ச்சி பலன்கள் - 2015

ஜோதிடத்தில் பொதுவாக குருவும் சுக்கிரனும் சுப கிரகங்களாக கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன் வாழ்பவர்களை பார்த்து சுக்கிர தசை அடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித செல்வத்திற்க்கு காரகர் குரு பொது செல்வத்திற்க்கு காரகர் எனவே குரு பெயர்ச்சி எல்லோராலும் எதிர்பார்க்கும் தன்மையுடையதாகிறது. குரு பகவான் கொடுக்கும் பலன்களைத் தெரிந்து கொள்வோம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2015
குரு பெயர்ச்சி பலன்கள் - 2015
குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்க்கும் பொருள் சேமிப்பிற்கும் சகல சௌபாக்கியத்திற்க்கும் புத்திர பாக்கியத்திற்க்கும் அன்பிற்கும் பண்பிற்கும் காரகராகவும் ஓளிபடைத்த மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குபவராகவும் தலைவணங்காத தலைமைப் பதவியைத் தந்திடுவார். மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார். நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார். புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார். புத்திரகாரகன் என்பதால் ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் புத்திரர்களால் கஷ்டத்தையும் உருவாக்குவார்.


குரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்து இவரது திசை இளமையில் வந்தால் கல்வியில் முதன்மை நிலை உண்டாகும். நடு வயதில் வந்தால் சகல பாக்கியங்களும் ஏற்படும். இறுதிப்பகுதியில் வந்தால் சந்ததிகள் செழிப்பார்கள். கோசாரத்தில் குரு இருக்கும் ஸ்தானத்திற்கு ஐந்தில் சூரியன் வரும் பொழுது வக்கிர கதி ஏற்படும். ஒன்பதில் வரும் பொழுது வக்ர நிவர்த்தி ஏற்படும். ஜாதகர் பிறக்கும் பொழுது குரு வக்கிரத்தில் இருந்தால் குரு வக்கிரம் அடையும் பொழுது அதிக நன்மைகளை ஏற்படும். பொதுவாக குரு இருக்கும் இடம் கெட்டுப்போகும், பார்க்கும் இடங்கள் பலம் பெறும். சனி இருக்கும் இடம் பலம் பெறும், பார்க்கும் இடம் கெடும். 

பொதுவாக ஜனன லக்கினம், சந்திரன் இருக்கும் ராசி, ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்தில் இருந்து 2-5-7-9-11 ஆகிய இடங்களில் கோசாரத்தில் குரு வந்தால் யோகம் தரும். பிற ஸ்தானங்களான 1-3-4-6-8-10-12 ஆகிய ஸ்தானங்களில் குரு வரும் போது தீய பலனைத் தருவார் என்பது நூல்களின் கருத்து. குரு பார்வை படும் ஸ்தானங்கள் பலம் பெரும். குரு தான் இருக்கும் ஸ்தானங்களிலிருந்து ஐந்து,ஏழு மற்றும் ஒன்பது ஆகிய ஸ்தானங்களைப் பார்வையிடுவார். 

குரு சிம்மத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக தனுசு ராசியையும் ஏழாம் பார்வையாக கும்பம் ராசியையும் ஒன்பதாம் பார்வையாக மேஷம் ராசியையும் பார்வையிடுகிறார். 

நல்ல பலன் அடையும் ராசிகள் மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் தீய பலன் அடையும் ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் குரு தரும் 

அசுப பலன்களின் தன்மை: குரு வருட கிரகம் எனவே இவர் தரும் அசுபப் பலனுக்கு அந்தந்த வீடுகளுக்கு ஏற்றவாறு தனித் தன்மை உண்டு, அதை விளக்கும் பழம்பாடல் பின்வருமாறு: ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும் இன்மை எட்டினில் வாலி பட்டம் இழந்து போம்படி யானதும் ஈசனாரொரு பத்திலே தலை ஓட்டிலே இரந்துண்டதும் தர்ம புத்திரர் நாலிலே வனவாசமப்படிப் போனதும் சத்ய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும் வன்மையுற்றிய ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும் மன்னுமா குரு சாரி மாமனை வாழ்விலா துரு மென்பவே குரு ஜென்ம ராசியிலிருந்து 1-3-4-6-8-10-12 ஆகிய ஸ்தானங்களில் தரும் அசுப பலன்களை இதிகாச நாயகர்களின் வாழ்க்கை நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு இந்த பாடல் விளக்குகிறது. ஆண்டுக்கு ஒருமுறை குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பிரவேசிப்பார். இந்தாண்டு வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜூலை 5ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கிறார். 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வோம். 

மேஷம்: செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாகும். வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள் நீங்கள். கடந்த காலத்தில் மேஷம் ராசிக்கு நான்காம் இடத்தில் கடகத்தில் இருந்த குரு அவ்வளவு நல்ல பலன்களை செய்ய விட்டாலும் அஷ்டம சனியால் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றினார். இப்போது ஐந்தாம் இடமான சிம்ம ராசியில் பெயர்ச்சியாகி வருவது நல்ல பலன்களைத் தரும் ஸ்தானமாகும். ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியம், குல தெய்வம், குழந்தைகள், மகிழ்ச்சி, திட்டமிடுதல், கற்பனை, கலைகளில் நாட்டம், குரு உபதேசம், பக்தி, ஆகியவற்றை குறிக்கும் ஸ்தானம் ஆகும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் புத்திரகாரகனும், தனகாரகனுமான குரு அமர்வது அதிர்ஷ்டத்தைத் தரும். மக்கள் பேறு, மகிழ்ச்சி, உண்மையான நண்பர்கள், விசுவாசமான வேலையாட்கள், சகல விதமான செல்வ பாக்கியம், குலதெய்வ வழிபாடு பூஜை, தாய்மாமன் ஆதரவு, பரம்பரை சொத்துகள் கிடைத்தல், புதிய சொத்துகள் வாங்கக் கூடிய வாய்ப்புகளும், நீண்டகால கனவுகள் யாவும் நிறைவேறும், புதிய திட்டங்களும், ஆசைகளும் நிறைவேறும். திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு வாரிசு உண்டாகும். திருமண வயதில் திருமணத்திற்க்காக காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண யோகம் கைகூடி வரும். குடும்பத்தில் சுபமான மங்கள காரியங்கள் நடைபெறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்றவாறு கௌரவமான வேலையும், பதவியில் இருப்போர்க்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்க்கு பதவி உயர்வுடன் இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகங்கள் பயணங்கள் அனுகூலம், ஆதாயம் தரும். உங்கள் ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உங்கள் புகழ், அந்தஸ்து, கௌரவம். மதிப்பு, மரியாதை, உற்றார், உறவினர், நண்பர்கள் மத்தியில் உயரும். உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தை குரு பார்ப்பதால் தெய்வ அனுகூலம் காரியசித்தி, பூர்வீக சொத்துகள் ஆகியவற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை கும்பிட்ட தெய்வங்கள் எல்லாம் இப்பொழுது கண் திறந்து கருணைமழை பொழியும். உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தை குரு பார்ப்பதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி கிட்டும். திருமணமான பெண்கள் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு புகுந்த வீட்டில் இதுவரை அடைந்த மனக் கஷ்டங்கள், மாமியார், நாத்தனார்களினால் தொல்லை அனுபவிக்கும் பெண்களுக்கு எல்லாம் இந்த குரு பெயர்ச்சி ஆறுதலை தரும். அஷ்டமத்து சனி நடப்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். கோர்ட் வம்பு தும்பு வழக்கு தேடி வரலாம். எல்லா செயலையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. பணம், காசு கொடுக்கல் வாங்கல், அடுத்தவருக்கு ஜாமீன் போடுவது கூடாது. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இறங்கும் பொழுது திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஜாதகம், தசாபுத்தி ஆகியவற்றை நன்கு பார்த்து திருமண முயற்சி செய்ய வேண்டும். குரு பெயர்ச்சி யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொடுத்தாலும் அஷ்டமத்து சனி அலைச்சல், மன உளைச்சல், சங்கடங்களை கொடுத்து காரிய வெற்றியை கொடுக்கும். பொதுவாக இந்த குரு பெயர்ச்சியினால் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். 

ரிஷபம்: சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து நடக்க கூடியவர்களாகவும், வசீகரப் பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்களாகவும் இருப்பிர்கள். நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் நீங்கள். சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை மாற்றி கொள்ளும் பாங்குடைய இன்பமான வாழ்க்கை வாழும் ரிஷப ராசி அன்பர்களே இது வரை மூன்றாமிடத்தில் குரு இருந்த பொழுது துரியோதனன் படை மாண்டதும் என்ற நிலை நீடிக்குமா.?அல்லது விமோசனம் கிட்டுமா என்ற ஏக்கம் தான். ராசிக்கு நான்காமிடத்தில் குரு வந்தபோது தருமபுத்திரர் வனவாசம் போனாதும் என்பது பாடல். அது போல நடக்குமா என்றால் அப்படியில்லை. உங்கள் ராசி நாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டுக்கும் பதினொன்றிற்கும் அதிபதியான குரு பகவான் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் பொழது உடல் உபாதைகள் ஏற்படும்.வீட்டில் நிம்மதியும் சுகமும் குறையும், .வாலிபர்களுக்கு பெண்களால் வீண்பழி உண்டாகும், வாகன செலவுகள் அதிகரிக்கும் தன் வீட்டில் வசிக்க முடியாமல் வெளியூர் சென்று வசிக்க நேரிடும், கல்வியில் தடை வரக் கூடும், உற்றார் உறவினர் பகை வரும். குருசிம்மம் ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக எட்டாம் வீட்டை பார்ப்பதால் உடல் உபாதைகள் விரைவில் குணமாகும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீண் வம்புகள் கஷ்டத்தைத் தராது மனதில் ஏற்பட்டிற்கும் பயம் விலகும் மற்றும் மனைவி மூலமாக தனவரவு ஏற்படும். சிம்மத்தில் இருந்து ஏழாம் பார்வையாக பத்தாம் பாவத்தை பார்ப்பதால் முடங்கிக்கிடந்த தொழில் வளர்ச்சி பெறும் உத்தியோகத்தில பதவி உயர்வு கிடைக்கும். சிம்மம் ராசியில் இருந்து ஒன்பதாம் பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் தடைபட்டு நின்ற சுபகாரியங்கள் நடைபெறும் தீர்த்த யாத்திரை சென்று வர வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால் கௌரவத்துக்கு பங்கம் ஏற்படாது. கண்ட சனி நடப்பதால் எல்லா விசயங்களிலும் சற்று கவனமாக நடப்பது நன்று. மிதுனம்: புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாகவும்,சகிப்பு தன்மையும், பொறுமையும் உடையவர்களாகவும் எல்லா காரியங்களையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான அதிபதியான குரு இப்பொழது மூன்றாம் இடத்திற்கு மாறி உள்ளார். தீதிலாதொரு மூன்றில் துரியோதனன் படை மாண்டது என்பது பாடல். உங்கள் ராசிக்கு பாதகாதிபதி மற்றும் கேந்திராதிபதியான குரு பகவான் மூன்றாம் இடத்தில் மறைவதால் பெரிய பாதிப்பை தரமாட்டார். இது வரை இரண்டில் இருந்த குரு பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை கொடுத்திருப்பார் மூன்றில் வரும் குருவும் நல்ல பலன்களைத் தருவார் என எதிர்பார்க்கலாம். குரு தனது ஐந்தாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும், பிரிந்துபோன நண்பர்கள் தேடி வருவார்கள், உத்தியோக வகையில் புதிய ஓப்பந்தங்கள் தேடி வரும், உங்கள் சகோதர சகோதரிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும், தந்தை மூலமாக இலாபம் வந்து சேரும். குரு தனது ஏழாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் தந்தையாருக்கு கீர்த்தியும், புகழும். நீண்ட தூர தீர்த்த யாத்திரை சென்று வரும் பாக்கியம் கிட்டும். மன அமைதியும் சந்தோஷமும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் இருக்கும்.குரு ஒன்பதாம் பார்வையாக பதினொன்றாம் இடத்தை பார்ப்பதால் தொழில் முன்னேற்றமும் நல்ல லாபமும் உண்டாகும். திருமண வயதில் உள்ள உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணமான குழந்தையில்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

கடகம்: சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் நீங்கள் உங்கள் ராசிநாதன் சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறையாகவும், பதினைந்து நாட்கள் தேய்பிறையாகவும் உலவி வருவார்,விருச்சிகத்திலிருந்து ரிஷபத்தை நோக்கி போகும் பொழது உங்கள் மனநிலை சீராகவும் சிறப்பாகவும் செயல்படும். ரிஷபத்தில் இருந்து விருட்சிகத்தை நோக்கி போகும் பொழுது இனம்புரியாத குழப்பம் சங்கடம் தோல்வி பயம் உங்களை வாட்டும். இதுவரை உங்கள் ஜென்மராசியில் குரு பகவான் தேவை இல்லாத மன உளைச்சல்.அவமானம் சங்கடங்களை கொடுத்தார்.இப்பொழுது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அதாவது இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்க போகிறார். தன ஸ்தானத்தில் தன காரகன் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக தாங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடும். வாக்கு நாணயம், சொல்கின்ற சொல் பலிதமாகும், பணவரவு திருப்தி தரும், பொருளாதரத்தில் முன்னேற்றம் உயர்ந்து காணப்படும், உயர் பதவிகள் தேடி வரும், அனைவருடனும் நல்லுறவு மேம்படும். 

உங்கள் ராசிக்கு பாவத்தை குரு பார்ப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும், இல்லாத நோய்க்கு வைத்தியம் பார்த்தவருக்கு எல்லாம் நோய் நொடி நீங்கும். 6ம் பாவம் 10 பாவத்திற்கு 9ம் பாவமாக வருவதால் தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும் தொழில் அபிவிருத்தி ஏற்படும், அசையா சொத்துகள் வீடு,மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். 7ம் பார்வையாக 8ம் இடத்தை பார்ப்பதால் எதிரிகளின் போட்டி பொறாமைகள் தொல்லைகள் நீங்கும்.இதுவரை உங்களை எதிரி போல் நினைத்தவர்கள் எல்லாம் உங்களிடம் சரணடைந்து விடுவார்கள் மனைவி மூலமாக தன வரவு வரும்.வழக்குகளில் வெற்றி கிட்டும். சுப காரியங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். தனது 9ம் பார்வையாக 10ம் மிடத்தை பார்ப்பாதல் வேலை கிடைக்காதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்,பதவி உயர்வும் வெகுமதியும் கிட்டும்.கொடுக்கல்,வாங்கலில் இருந்த தடுமாற்றங்கள் விலகும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும்.. 

சிம்மம்: இது வரை சிம்மம் ராசிக்கு 12ல் இருந்த குரு இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்குள் வருகிறார். ஜென்ம ராமர் வனத்தில் சீதையை சிறை வைத்தது என்பது பாடல். அதனால் நமக்கு கஷ்டம் என்பது அர்த்தமல்ல. உங்கள் ராசிக்கு 5க்கும், 8க்கும் உரியவர் குரு பகவான். 5ம் இடம் என்பது மனது, இதயம், திட்டம், எண்ணம், மகிழ்ச்சி, குரு உபதேசம் ஆகியவற்றை குறிக்கும் இடம். ஏற்கனவே 12-ல் வந்த பொழுது இராவணன் முடியற்று வீழ்ந்தது என்பது பாடல். 5க்கும், 8க்கும் உடைய குரு பகவான் 12ல் மறைந்து கெட்டவன் கெட கிட்டிடும் ராஜயோகம் என்ற அடிப்படையில் அதர்மத்துக்கு தலை குனிந்து விட்டார். விதி வசத்தால் வன வாசம் போனவர்கள் எல்லாம் நல்லவர்களாக காட்சி தந்தார்கள். குரு 5ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5மிடத்தை பார்ப்பபதால் திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகளின் மேல் படிப்பிற்காக செலவுகள் அதிகரிக்கும். தாய் வழியில் தன வரவு வரும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7மிடத்தை பார்ப்பதால் வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.7மிடம் என்பது 10மிடத்திற்கு 10மிடம் ஆகும். அதனால் தொழில் முன்னேற்றம் மற்றும் திருமண சுப காரியங்கள் கை கூடும். குரு உங்கள் ராசிக்கு 9மிடத்தை 9ம் பார்வையாக பார்ப்பதால் தெய்வ அனுகூலம் கிட்டும். இதுவரை தடைபட்ட காரியங்கள் கைகூடும். வெற்றி தேடி வரும். வெளியூர் பயணம் அனுகூலம் ஆதாயம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 

கன்னி: இது வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் நீங்கள் நினைத்ததை விட ஏற்றம் கொடுத்து இருப்பார் இப்பொழது 12ம் பாவமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். வாய்மை யுற்றிட ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும்.என்பது பாடல். கோட்சாரத்தில் குரு ராசிக்கு 12 ல் சஞ்சரிக்கும் காலத்தில் மாரக பயமும்,பதவி இழத்தலும் ஏற்படும் என்பது பொது விதி. இருப்பினும் கன்னி. மிதுனம் ஆகிய வீடுகளுக்கு பாதகாதபதி குரு அதனால் கெட்ட இடத்திற்கு குரு வரும் காலம் கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜ யோகம் என்ற அடிப்படையில் இந்த குரு பெயர்ச்சி மிகவும் நன்மையை செய்யும். உங்கள் ராசிக்கு 4 ம் வீடு பூமி வீடு,வாகனம் சுகம் கல்வி,தாய் ஆகிய ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அதன் அடிப்படையில் யோகங்கள் வரும்.சகல காரியங்கள் சித்தி பெறும். உங்கள் ராசிக்கு 6ம் பாவத்தை குரு பார்ப்பதால் கடன் சுமை குறையும். நோய் நொடி நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு 8ம் பாவத்தை குரு பார்ப்பாதல் வழக்கு வெற்றிகள் சாதகமாகும். பயம் நீங்கும்.எதிர்பாராத வகையில் பண வரவு வரும். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும். வேண்டுவது பொறுமை வேண்டாதது கோபம். 

துலாம்: இது வரை உங்கள் ராசிக்கு 10ம் பாவத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானமான சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளார். 11ம் பாவம் என்பது மூத்த சகோதரர்கள், வித்தை, லாபம், நட்பு, மன ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். உங்கள் ராசிக்கு 11ம் பாவத்தில் குரு வரும் பொழுது முழுமையான யோகத்தைச் செய்யும் என்பது பழமையான ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கு 3க்கும் 6க்கும் உடைய குரு பகவான் உங்கள் ராசிநாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமாக இருந்தாலும் குருவின் வீட்டில் தான் சுக்கிரன் உச்ச அந்தஸ்து பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3ம் பாவத்தை குரு 5ம் பார்வையாக பார்ப்பாதல் வீரம்,போகம் துணிவு துணைவர் பலம், ஆயுள்பலம், எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். தேவ குரு ராசிக்கு 11ம் பாவத்தில் வந்தால் செல்வம் சீர் குதிரை வெண்குடை தீவர்த்தி தருமமும் தானமும் உண்டு.தாய் தந்தை துணையுமுண்டு. குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் மிடத்தை பார்ப்பதால் உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் ராசிக்கு 7ம் மிடத்தை 9ம் பார்வையாக குரு பார்ப்பாதல் இது வரை தடை பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதிகளுக்கு அல்லது விவாக ரத்து பெற்றவர்களுக்கும் மறுமணத்தை நடத்தி வைப்பார், தொழில் வர்த்தகம் மேலோங்கும். 

விருச்சிகம்: இது வரை உங்கள் ராசிக்கு 9ல் இருந்த குரு இப்பொழுது உங்கள் ராசிக்கு 10ம் இடத்துக்கு மாற உள்ளார். 9மிடம் என்பது யோக ஸ்தானம். 10ம் இடம் சுமாரான இடம் தான். பத்தாமிடத்து குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல். கடந்த காலத்தில் குரு 9ல் நல்ல இடத்திலிருந்து நன்மைகளை அடைந்தவர்கள் பத்தில் குரு மற்றும் ஜென்ம சனி ஆகியவற்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக கடன் படும் நிலையும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையயும் உருவாகும். உங்கள் ராசிக்கு 2க்கும் 5க்கும் உடைய குரு இப்பொழுது 2ம் இடத்துக்கு 9ல் வருகிறார். இது ஒரு நல்ல அமைப்பு. தனவரவு திருப்தி தரும். இது வரை ஏழரை சனி குரு பார்வையில் இருந்ததால் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோட சென்றது. குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான வாக்கு வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்க்க போவதால் சொன்ன சொல்லை காப்பாற்றலாம். குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தலாம். உங்கள் ராசிக்கு 4ம் வீட்டை 7ம் குரு பார்வையாக பார்ப்பதால் தாயார் வகையில் அனுகூலம் பெறலாம். பூமி, வீடு, வாகன ஸ்தானத்தை பார்ப்பதால் அவற்றில் விருத்தி, அபிவிருத்தி, நல்ல பலன்களை காணலாம். உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் உண்டாகும் நன்மதிப்பு கூடும். குரு 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடத்தை பார்ப்பதால் வீண் விவாதங்கள் குறைந்து பகைமை மறையும். நோய், நொடிகள் குணமாகும். இதுவரை பணத்துக்கு வீண் வட்டி கட்டியவர்கள் எல்லாம் அசலை முழுமையாக அடைத்து விடலாம். அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிலும் அவசரப்படாமல் செயல்படுங்கள். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். ஏழரை சனி நடப்பதால் யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும். 

தனுசு: இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு இப்பொழுது ராசிக்கு 9ம் இடத்திற்கு மாற இருக்கிறார். உங்கள் ராசி நாதனான குருவே உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும் நல்லது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பார்கள். ஏற்கனவே ராசிக்கு 8ல் குரு இருந்த காலம் ராசிநாதனே அஷ்டமத்தில் மறைந்ததால் சிலருக்கு விபத்து வைத்திய செலவு,வேலையில் பிரச்சனை,ஓய்வு ஓழிச்சல் இல்லாத உழைப்பு, உழைத்தும் பெருமையில்லை,எதிர்பார்த்த காரியங்கள் கை கூடாமை,போன்ற தீய பலன்களைத் தந்து ஏமாற்றங்களை தந்தது. 9ல் இடத்து குரு கஷ்டங்களை போக்குவார்.கண்ணீரைத் துடைப்பார் ஆறுதலை தருவார்.குருவருளும் திருவருளும் வழி நடத்தும். கும்பிடபோன தெய்வம் ஏதிரே வந்து உதவி செய்யும். உங்கள் ராசி நாதன் குரு 5ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க போவதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம். கண்டபடி கை நீட்டிய இடமெல்லாம் கடனை வாங்கி அசலும் அடைக்க முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் தலை குனிந்தவர்கள் எல்லாம் இனி தலை நிமிர்ந்து நடக்கலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு. குரு தன் 9ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் மிடத்தை பார்க்கப் போவதால் உங்கள் கஷ்ட நிலைகள் மாறும் பொருளாதார நெருக்கடி நீங்கும், உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும், உங்களை அலட்சிய படுத்தியவர்கள் எல்லாம் வலிய வந்து நலம் விசாரிப்பார்கள். தங்கள் சுய நலத்திற்க்காக சில சுய நலவாதிகள் உங்களை நாடி வருவார்கள். இனிமேல் வசதியும்,யோகமும் அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும் பொழது ஆசையுள்ளவர்கள் தேடி வருவது இயற்கைதானே. ஏழரை சனி நடப்பதால் இருக்கிற உத்தியோகத்தில் கவனம் தேவை கொள்ளுங்கள், புதிய முயற்சிகளை தள்ளி போடுங்கள்.கூட்டு தொழிலில் கவனமாக இருங்கள். உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு காலதாமதம் ஆகலாம் ஆனால் அவை அனைத்தும் வெற்றி பெரும். 

மகரம்: கடந்த ஓரு வருடமாக உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்து நற்பலன்களைக் கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது ராசிக்கு 8ம் இடமான. விபத்து, கண்டம் அபகீர்த்தி, அவமானம், கௌரவப் போராட்டம், விரக்தி, மனக் கஷ்டம், மன சஞ்சலம் என்ற இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் குரு வந்த பொழுது பெரும் மாற்றங்களை நல்ல விதமாக சந்தித்தவர்கள் தான் அதிகம். உங்கள் ராசிக்கு 3 க்கும் 12 க்கும் உரியவரான குரு பகவான் 3,6,8,12, ல் வரும் பொழுது முழுமையான யோகத்தை செய்வார். உங்கள் ராசிக்கு 8ல் வரும் குரு தன்னுடைய 5ம் பார்வையாக ராசிக்கு 12ம் இடத்தை பார்க்க போவதால் வெளிநாடு சம்பந்த பட்ட வேலை வாய்ப்பு, பொருள் வரவு, நிம்மதியான தூக்கம், சுபகாரியங்கள் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் பாவத்தை குரு பார்ப்பாதல் இது வரை கொடுத்ததை வாங்க முடியவில்லை.வாங்கியதை கொடுக்க முடிய வில்லை என்ற நிலை மாறி வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம். எதிர்பாரத விதமாக பணம்,காசு கையில் புரளும். தேடி வந்து உதவி செய்வார்கள். பணம் இருந்தாலே நிம்மதியும் மக்களும் நண்பர்களும் கூடி விடுவார்கள் அல்லவா அதனால் எதையும் நீங்கள் தேடி போக வேண்டாம் எல்லாம் உங்களை தேடி வரும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4ம் இடமான பூமி, வீடு, வாகனம், சுகம், கல்வி ஆகிய காரகத்துவம் உள்ள இடத்தை பார்ப்பதால் இடம் வாங்குதல், புது வீடு குடி போகுதல், புதிய வாகனம் வாங்குதல் போன்ற சுப செலவுகள் ஏற்படும். இது வரை இனம் புரியாத நோய்க்கு வைத்தியம் பார்த்தவர்களுக்கு எல்லாம் உடல் நிலை சீராகும் முக வசீகரம் அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் பட்டத்தை இழக்க போவதும் இல்லை பதவியையும் இழக்க போவதும் இல்லை கௌரவம் அந்தஸ்து உயரும். 

ஆடி மாதத்திற்கு மேல் உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியை பார்க்கப் போவாதல் 8ம் இடத்து குருவால் பாதகமில்லை கவலை பட வேண்டாம். பொதுவாக ராசியதிபதி, லக்னாதிபதி ராசி, மற்றும் லக்னத்தை பார்த்தால் கோசார கிரகங்களால் எந்த பாதிப்பும் வராது என்பது தொன்மையான ஜோதிட நூல்களின் விதி எனவே நற்பலகன்களை அதிகமாக எதிர்பார்க்கலாம். 

கும்பம்: இது வரை உங்கள் ராசிக்கு 6 ம் இடத்தில் இருந்த குரு பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார் .இது குருவுக்கு மிகவும் நல்ல இடம். உங்கள் ராசிக்கு 2க்கும் 11க்கும் உடைய குரு உங்கள் ராசியை பார்ப்பது புகழ் அந்தஸ்து.கௌரவம்.தொழில்,நண்பர்கள் வகையில் அனுகூலம். ஆதாயத்தையும் தரும். இது வரை 6ல் குரு உச்சமாக இருந்ததால் கடன்,போட்டி,பொறாமை,ஏதிரி,நோய்,வைத்திய செலவு, பல பிரச்சினைகள் என்று உங்களை தாக்கியது. இனி அந்த நிலைகள் மாறி எல்லா விசயங்களும் சாதகமாகும். குரு உங்கள் ராசிக்கு 2க்குடையவர் என்பதால் செல்வாக்கும், சொல் வாக்கும் மதிப்பும் மரியாதையும் உயரும். கல்யாண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும் மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும். நல்லதே நடக்கும் கடவுளை நம்புங்கள்.

மீனம்: உங்கள் ராசி நாதன் குருபகவான் இது வரை 5ம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருந்தார்.அதனால் கௌரவத்துக்கு பங்கம் இல்லாமல் வாழ்க்கை ஓடி இருக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 6 ம் பாவமான எதிரிகள், கடன்கள், நோய்கள் துன்பம் பயம் தண்டனை ஆகிய காரகத்துவங்களைக் குறிக்கும் ஸ்தானத்தில் ராசி நாதன் வரும் பொது எதிரிகளின் தொல்லை நீங்கும், கடன்கள் திரும்ப செலுத்தும் நிலை உருவாகும், பலவித நோய்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் நீங்கும். குரு 5 ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 மிடத்தை பார்க்க போவதால் செய் தொழில் முன்னேற்றம் கொடுக்கும்.வியாபாரம் விருத்தி அடைந்து பெயர் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். குரு 7 ம் பார்வையாக ராசிக்கு 12 ம் பாவத்தை பார்க்கப் போவதால் வீண் விரையங்கள் குறையும் சுப செலவுகள் செய்ய போதுமான அளவு பணவரவு கிடைக்கும்.புனித யாத்திரை செல்லும் நிலை உருவாகும். குரு 9ம் பார்வையாக ராசிக்கு 2 ம் இடத்தை பார்க்கப் போவதால் வாக்கு வன்மை அதிகரிக்கும் சொன்ன சொல்லை காப்பாற்றிவிடலாம். குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை சந்தோஷம் இருக்கும் தனம் பொன் பொருள் சேர்க்கை, வங்கி சேமிப்பு அதிகரித்தல், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் வரும். பரிகாரம்: இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும். பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வதும், திருச்செந்தூர் சென்று கடலில் ஸ்நானம் செய்து முருகப் பெருமானை வழிபாடு செய்வதும் வியாழன் கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைகடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழி பட்டு வந்தால் நல்ல பலன்கள் விரைவாகவும் அதிகமாகவும் நடை பெற உதவும் மேலும் தீய பலன்கள் பெரும் பாதிப்பு தராமல் காப்பாற்றிக் கொள்ள உதவும். அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகள். அனைத்து ராசி அன்பர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையில் விருத்தியையும் வளத்தையும் வழங்குவதற்கு வாழ்த்துகள். 

Friday, June 26, 2015

சென்னை இரயில்வே தொழிற்சாலையில் (ICF ACT APPRENTICE) ஆக்ட் அப்பர்டீஷ் பயிற்சி விண்ணப்ப படிவம்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு,
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ITI முடித்த மாணவ மாணவியர் கவணத்திற்கு.

சென்னையில் உள்ள இரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ICF ACT APPRENTICE) ஆக்ட் அப்பர்டீஷ் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்ப
படிவம் 11-06-2015 அன்று முதல் வழங்க பட்டுவருகிறது. பயிற்சியின் பொழுது ஒவ்வொரு மாதமும் 5500ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்க படுகிறது.


சென்னை இரயில்வே ஆக்ட் அப்பர்டீஷ் பயிற்சி
சென்னை இரயில்வே ஆக்ட் அப்பர்டீஷ் பயிற்சி

விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்:

நம் தமிழக மாணவர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புர்ணர்வை ஏற்படுத்த
உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இதனை பற்றிய
விழிப்புர்ணர்வு அதிகம், அதன் காரணமாகதான் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்  தகுதியில்லாத போலியான மதிப்பெண்,பிறப்பு,சாதி சான்றிதழ்களை கொண்டு வயதுமுதிர்ந்த வடநாட்டு இளைஞர்களை முறைகேடாக ஐ.சி.எப், இரயில்வே, போன்ற மத்திய அரசு நிறுவத்தில் நம் மாநிலத்துக்கு உரிய இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து பலன் பெற்று வருகிறார்கள் .


அமைதி பூங்கவான தமிழகத்தில் நிலை கொண்டு விடுகிறார்கள் . இதனை தங்களால் முடிந்த அளவுக்கு நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும் ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புர்ணர்வு தமிழக மாணவர்களிடத்தில் ஏற்படுத்த உதவுங்கள்.

விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டிய கடைசி தேதி 04-07-2015.

Wednesday, June 24, 2015

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI Assistant Officers) 504 உதவியாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியான (RBI Assistant Officers) வங்கியில் பல்வேறு மாநிலங்களின் அலுவலகங்களில் காலியாக உள்ள 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னைக்கு மட்டும் 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


RBI Assistant Officer Recruitment Exam
RBI Assistant Officer Recruitment Exam

காலியிடங்களின் எண்ணிக்கை: 506

பணி: உதவியாளர்

தகுதி: குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.06.1987 - 01.06.1997 தேதிக்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.07.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://goo.gl/pqYZEf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, June 19, 2015

வேலைவாய்ப்புக்கு என பிரத்யேக வெப்சைட் துவங்கிய இந்திய ராணுவம் (Indian Army)

டெல்லி: வேலைவாய்ப்புக்கு என்று பிரத்யேகமாக ஒரு இணையதளத்தை இந்திய ராணுவம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்திய ராணுவ வேலைவாய்ப்புக்கு என்று http://www.joinindianarmy.nic.in/ என்ற இணையதளம் வியாழக்கிழமை துவங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், ஜூனியர் கமிஷன் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளை இந்த இணையதளம் மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்


புதிய இணையதளத்தை லெப்டினென்ட் ஜெனரல் பிலிப் கம்போஸ் துவங்கி வைத்தார். இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ராணுவத்தில் அதிகாரிகளை சேர்க்க இந்த இணையதளம் உதவியாக இருக்கும். ராணுவத்தில் என்ன பணிக்கு ஆட்கள் தேவை என்ற விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். அதை பார்த்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள http://indianarmy.nic.in/ என்ற இணையதளத்துடன் இந்த புதிய இணையதளமும் செயல்படும்.

Thursday, June 18, 2015

உங்கள் விரல் நுனியில் சென்னை பேருந்து, ரயில் தகவல்களை தரும் ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)

எந்த பேருந்து, எந்த இடத்திற்கு போகும் என்பது தெரியாமல் குழம்புபவர்கள் நிறைய பேர் உண்டு. பேருந்து நிறுத்தத்தில் பக்கத்தில் இருப்பவர்களை கேட்டால், பெரும்பாலும், 'தெர்ல...' என்று தான் பதில் வரும். இந்த நிலையில், சென்னையில் திக்குத் தெரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ, ஒரு கைபேசி செயலி வந்திருக்கிறது.

ஐ.ஐ.டி-., மெட்ராஸ் பட்டதாரிகளான சித்தார்த், அகிலேஷ் மற்றும் கிருஷ்ணா ஆகிய மூவரும், இந்த செயலியை உருவாக்கி இருக்கின்றனர். ஐ.ஐ.டி.,யில் இயங்கிவரும் ஆராய்ச்சிப் பூங்காவின் தொழில்முனைவு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், இந்த செயலியை அவர்கள் மூவரும் உருவாக்கியிருக்கின்றனர்.
ராப்ட் (Raft) என்ற இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும், சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகள் மற்றும் உள்ளூர் ரயில்களின் வழித்தடங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)
ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)

'ஏற்கனவே கூகுள் மேப்ஸ் உட்பட சில செயலிகள் சென்னைவாசிகளுக்கு உதவினாலும், எங்களுடைய, 'ராப்ட்' செயலி மிக சமீபத்திய தகவல்களுடன் இயக்கப்படுகிறது என்பது முக்கியமான வித்தியாசம். 10 பேர் கொண்ட எங்கள் அணி, பல இடங்களுக்கு நேரில் போய் பார்த்து, தகவல்களின் துல்லியத்தை மேம்படுத்தியபடி இருக்கிறோம்' என்கிறார், ராப்டின் இணை நிறுவனர்களில் ஒருவரான சித்தார்த்.

கடந்த, டிசம்பர், 2014ல் வெளிவந்த இந்த செயலிக்காக, ஆறு மாதங்களாக, சென்னையின், 6,500 பேருந்து நிறுத்தங்கள், 1,500 பேருந்து வழித்தடங்களை செயலியில் பதிந்திருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் சென்னை மாநகர பேருந்து, 50 வழித்தட எண்களை மாற்றியது. 'நாங்கள் உடனே அந்த தகவலை எங்கள் செயலியில் ஏற்றி விட்டோம். ஆனால், கூகுள் மேப்ஸ் தளம் இன்னும் பழைய பஸ் ரூட்களையே காட்டிக் கொண்டிருக்கிறது' என்கிறார் சித்தார்த்.

ராப்டின் மூவரணியின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. இணையத்திலுள்ள, கூகுள் ப்ளே ஸ்டோரில், இலவசமாக கிடைக்கும் ராப்ட் செயலியை, இதுவரை, 75 ஆயிரம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். 'இதுவரை 1,800 பேருக்கும் மேற்பட்ட பயனாளிகள், 4.6 நட்சத்திர மதிப்பீடு தந்திருப்பதே எங்கள் செயலியின் தரத்திற்கு சான்று. வேறு எந்த சென்னை போக்குவரத்து செயலிக்கும், இவ்வளவு உயர்ந்த நட்சத்திர மதிப்பீடு கிடைத்ததில்லை' என்கிறார் சித்தார்த்.

பிரதமர் நரேந்திர மோடி மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

புதுடெல்லி:  நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார். பொதுமக்களுடன் எப்போதும் நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பெயரில் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி, தகவல்களை தொடர்ந்து பதிவு செய்து பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

நரேந்திர மோடி ஆப்
நரேந்திர மோடி ஆப்


அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு நரேந்திர மோடி என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களில் நரேந்திரமோடி செயலியை டவுன்லோடு செய்து தேவையாக தகவல்கள், இமெயில்கள் மற்றும், வானொலி பேச்சுக்களையும் எப்போதும் எந்நேரமும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவிக்கலாம் மற்றும் பிரதமருடன் கலந்துரையாடலாம்.

இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்துகொண்டால், பிரதமரிடம் இருந்து தகவல்கள் மற்றும் இ-மெயில்களை நேரடியாக பெற முடியும். இத்தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வாருங்கள் மொபைலில் இணைந்திருங்கள் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Monday, June 15, 2015

அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் : பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா’ (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார்.

பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா திட்டம்:

நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது.
மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு தொடங்கி வைப்பார்கள்.

மேலும், அனைவருக்கும் வங்கி கணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள் சார்பில் முகாம்கள் நடத்தப்படும்.

விபத்து காப்பீடு :

இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ‘ஆதார்’ அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

பிரதமர் கடிதம் :


இந்த திட்டம் குறித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இ–மெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

நாடு முழுவதும் 7 கோடி குடும்பத்தினருக்கு நாம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். இதை தேசிய முன்னுரிமை பணியாக கருத வேண்டும். இது கடினமான பணியாக இருந்தாலும், இந்த சவாலை சந்திக்க வேண்டும்.

இன்னும் பலருக்கு வங்கி கணக்கு இல்லாததால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, இதை அவசர பணியாக கருதி செய்ய வேண்டும். நாட்டில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் யாரும் விடுபடாதவாறு தாங்கள் பணியாற்ற வேண்டும்.

வங்கி கணக்கு இருந்தால், கடன் வசதியை பெற்று, அந்த மக்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.

வங்கி கணக்கு வைத்திருப்பது முக்கிய பாதுகாப்பு அம்சம்:

பெண்களுக்கு நிதி அதிகாரம் அளிப்பதில் வங்கி கணக்குகள் முக்கிய பங்காற்றும்.'ஜன்-தான் யோஜனா' திட்டத்தின் கீழ் இன்று 1.5. கோடி வங்கி கணக்கு பெறுபவர்கள் காப்பீடு அம்சமும் பெறுவார்கள். நாடு விடுதலை பெற்று 68 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் 68 சதவீதம் மக்கள் வங்கி சேவையில் இணைவில்லை. 

பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா திட்டம்
பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா திட்டம்


ஏழ்மையை விரட்ட, நிதி தீண்டாமைக்கு முடிவுகட்ட வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது. அதிக புதிய கிளைகள் திறக்கப்படும், அதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும். இத்திட்டத்தினை முன்னெடுத்து செல்ல புதிய உள்கட்டமைப்பு அமைக்கப்படும். தபால் அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் வங்கி துறையில் பயன்படுத்தப்படும். இந்த முழு திட்டமும் ஏழைகளுக்கானது. ஏழ்மையை இந்தியாவை விட்டு விரட்டும் நடவடிக்கையாகும். 

வங்கி கணக்கு தொடங்குபவர்கள் ஜனவரி 26ம் தேதிக்கு ரூ. 30 ஆயிரம் காப்பீடு பெறுவார்கள். சேமிப்பு என்பதே நமது நாட்டின் இயல்பு. நாம் கடன் அட்டைகள் சார்ந்து இல்லை என்று கூறினார்.

Saturday, June 13, 2015

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக - 3 தேர்வுகளின் முடிவுகள் ஒரே நாளில் வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலமாக நடத்தப்பட்ட மூன்று குரூப் பணியிடத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டுள்ளது என்று பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பேட்டியில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் அடங்கிய செயல் அலுவலர் பணியில் காலியான 23 இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை 2013 நவம்பர் 16 ஆம் தேதி நடத்தியது.

www.tnpsc.gov.in
TNPSC Exam Results


இத்தேர்வை 20,433 பேர் எழுதினர். இவர்களுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதில் 49 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 23ம் தேதி நடைபெறும். மேலும், கால்நடை பராமரிப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியல் ஆய்வாளர் பணியில் 6 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,623 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நேர்முக தேர்வுக்கு 18 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 24ம் தேதி நடைபெறும். அதேபோல் அரசு எழுது பொருள் மற்றும் அச்சுப்பணியில் அடங்கிய உதவி பணி மேலாளர் பணியில் 8 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 11ல் நடத்தப்பட்டது. இத்தேர்வை 432 பேர் எழுதியிருந்தனர். 

இவர்களுக்கான ரிசல்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 22 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முக தேர்வு 24ம் தேதி தொடங்கும். நேர்முக தேர்வு பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பானை விரைவு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அழைப்பு கடிதத் தினை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வில் பங் கேற்க தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது. 

தேர்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தேர்வு செய்யப்பட முழு தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாக கருத இயலாது" என்று தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் ஒரே நாளில் 3 தேர்வு முடிவுகளை வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போனில் இன்டெர்நெட் வேகத்தை 4 மடங்கு அதிகரிக்க போகிறது கூகுள் லைட்

பெங்களூர்: டேட்டாவை குறைவாக பயன்படுத்தி, வேகமாக இயங்கும் வகையில் தேடுபொறி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது கூகுள் லைட் என அழைக்கப்படும் எனவும் கூகுள் அறிவித்துள்ளது. 

கூகுள் சர்ச் லைட் மூலம் நான்கு மடங்கு வேகமாக தேடல்களை மேற்கொள்ள முடியும் என கூகுள் அறிவித்திருக்கின்றது. இந்த புதிய முறை இந்தியாவில் இந்த மாதம் முதல் செய்லபட துவங்க உள்ளது.


கூகுள் சர்ச் லைட்
கூகுள் சர்ச் லைட்

வாடிக்கையாளர்கள் மொபைலில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைந்தால் புதிய அம்சம் தானாக பக்கங்களை எளிமையாக்குவதோடு இதன் மூலம் பக்கங்கள் லோடு ஆகும். 

வேகத்தையும் அதிகரிக்க முடியும் என கூகுள் நிறுவனத்தின் சர்ச் ப்ராடக்ட் மேனேஜர் ஹிரோடோ டொகுசெய் தெரிவித்தார். இதே முறையை இந்தோனேஷியாவிலும் சோதனை செய்யப்பட்டது, அங்கும் பக்கங்கள் நான்கு மடங்கு வேகத்தில் லோடு ஆனதோடு 80 சதவீதம் வரை டேட்டா குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றது என்றும் ஹிரோடோ தெரிவித்தார்.

Thursday, June 11, 2015

How to Download Call Letter of State Bank of India SBI PO Prelims Exam 2015

State Bank of India (SBI) released admit card for online examination for PO posts. Pre-exam training call letters had been released on 26.05.2015. Those candidates who had applied for SBI PO posts can download their admit card from the direct link given above.

The bank has invited online applications for 2393 Posts of PO and the last date to apply was 02 May 2015. 

Candidates can download their SBI PO Exam Admit Card 2015 for online exam to be held in June 2015. Candidates can find the direct link above to download their call letter for the exam.

SBI PO Admit Card 2015 sbi.co.in call letter for Probationary officer exam
Release Date - SBI PO Online Exam and Pre-Examination Training (PET) Call Letter had been released on 26 May 2015. The admit card for Online examination for all candidates will be available on or after 08 June 2015.
Download PET Call Letters - only for SC/ ST candidates.

SBI PO Exam Admit Card
SBI PO Exam Admit Card


Download Online Exam Letter

  1. Exam Date - PO exam is to be conducted on various dates in June 2015.
  2. Official website - http://www.sbi.co.in
  3. SBI admit card for Probationary officer 2015 exam can be downloaded from above given direct link after release on the dates shown. State Bank of India is going to conduct Probationary officer written exam in June 2015. Earlier SBI had advertised for the 2393 vacancies of Probationary officers in April 2015. The application process was over on 02 May 2015. Interested and eligible candidates have applied for the exam. Now all those who are waiting for the release of SBI PO Admit Card for online examination can download them from 09 June 2015. All the details regarding Exam Centre, roll number, time and date of exam can be found on the SBI PO Call Letter.
  4. SBI invited applications forms through online mode for its PO posts. It is estimated that lakhs of candidates might have applied for this. All those candidates are now waiting for their SBI PO admit card 2015 which will be available at direct link here. 

SBI PO 2015 Selection Process: 

  1. This time, SBI PO exam will be conducted in 3 phases.
  2. The phase 1 will be a pre exam basically to eliminate non-serious candidates.
  3. Phase 2 consists of Main exam and descriptive test.
  4. Phase 3 will be of Group discussion & interview.
  5. Final selection will be made on the basis of performance in Phase 2 & 3 taken together.
  6. Merely satisfying the eligibility norms does not entitle a candidate to be called for test or interview.

How to download SBI PO admit card 2015
You can download the call letter easily by visiting the direct link provided below. 

Here is the procedure to download. 

Go to http://www.sbi.co.in and click on career with us link.
  1. Now click the link for SBI PO call letter 2015.
  2. On the next page, enter your registration number and Date of birth and choose your admit card language.
  3. Click on submit. Your admit card will be displayed by the website.
  4. Save a soft copy of it and Print one copy.

Remember to bring your call letter as well as one photo identity proof in original and one photocopy. You will find all the important details like exam date, centre, details about the exam, roll number etc. mentioned in the admit card.

As far as selection process is concerned, after the release of hall tickets, Online written objective examination will be held. Those who qualify all the phases and clears the cut off, will be selected as POs in State Bank of India. Selected candidates will have to work in State Bank of India's branches located nationwide.

Monday, June 8, 2015

நரேந்திர மோடி பென்ஷன் திட்டம எப்படி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganized) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 - 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.


அடல் பென்ஷன் யோஜனா சிறு பங்களிப்பு நாளை பெரும் உதவி
அடல் பென்ஷன் யோஜனா சிறு பங்களிப்பு நாளை பெரும் உதவி

யார் இணையலாம்? 

18 வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும். 

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.


நரேந்திர மோடி பென்ஷன் திட்டம
நரேந்திர மோடி பென்ஷன் திட்டம

எப்படி இணைவது?

எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்? 

நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க அட்டவணை)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?

ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம். நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில் வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.


 எப்போது பணம் எடுக்கப்படும்?

நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?

வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.

பணம் கட்டாவிட்டால்? 

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப் படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?


இந்தத் திட்டத்தை வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85% அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?

நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்.?

இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும் (Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு 61 - 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார். (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?

இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது'' என்றார் கணேசன்.

Saturday, June 6, 2015

அனைத்து வங்கிகளிலும் குறை தீர்ப்பாயத்தை (ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்த்து அவர் களுக்கு தரமான சேவை அளிப்பதற்காக அனைத்து வங்கிகளிலும் குறை தீர்ப்பாயத்தை (ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் இந்த குறைதீர்ப்பாயம் செயல்படத் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பணப்பரிவர்த்தனை, கடன்கள் பெறுதல் மற்றும் திருப்பிச் செலுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துதலில் சேவை குறைபாடுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர்களிடம் புகார் தெரிவித்தாலும் அவற்றின் மீது அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், வாடிக் கையாளர்கள் பாதிப்படைகின்றனர்.

(ஆம்புட்ஸ்மேன்) அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது :

சென்னை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி குறைதீர்ப்பாய அலுவலக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஆம்புட்ஸ்மேன்
ஆம்புட்ஸ்மேன்


வங்கி சேவையில் ஏதேனும் குறைபாடுகள், பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுகுறித்து வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர், மண்டல மேலாளர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காணவில்லை என்றால் அடுத்த கட்டமாக வாடிக்கையாளர்கள் வங்கி குறைதீர்ப்பாயத்தில் புகார் அளிக்கலாம்.

தற்போது இந்த வங்கி குறைதீர்ப்பாயம் ரிசர்வ் வங்கியில் மட்டுமே செயல்படுவதால் அனைத்துப் புகார்களும் இங்கு வந்து குவிகின்றன. இதனால், இங்குள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இதன் காரணமாக வாடிக்கை யாளர்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விதமாக வங்கி களுக்குள்ளேயே குறைதீர்ப் பாயத்தை அமைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அனைத்து பொதுத்துறை, தனி யார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இத்தீர்ப்பாயம் அமைக்கப்படும். இந்த அதிகாரி கள் பெரும்பாலும் வங்கிகளுக் குத் தொடர்பில்லா பிற துறை களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். வரும் ஜூலை மாதம் முதல் இக்குறை தீர்ப்பாயம் செயல்படத் தொடங் கும் என தெரிகிறது.’’ இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்

ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 20 உணவுகள்

ஒரு சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருந்து குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் ஆண்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது. ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்கும் இந்தக் காலத்தில். பெண்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம்.
அதிகரித்து வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் 30 அல்லது 40 வயது வரை காத்திராமல், தங்கள் ஆரோக்கியத்தை இளம் வயதிலேயே பேணத் துவங்க வேண்டும்.
இங்கே ஆண்களுக்கு ஆரோக்கியம் ஊட்டும் இயற்கையான 20 வகை உணவுகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றைப் பின்பற்றி, உடலை ஆரோக்கியமாகவும், எளிதில் நோய் தாக்காதவாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.
மிதவெப்ப பழங்கள்:
மிதவெப்ப பழங்களான மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களின் தோலில் பயோஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பல சத்துப்பொருட்கள் உள்ளன. ஆகவே ஆண்கள் வெயில் காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப் பழங்களை தவறாது உட்கொள்வது அவசியம்.
சிகப்பு குடைமிளகாய்:
ஆரஞ்சு பழச்சாற்றை விட மூன்று மடங்கு அதிகமான அளவில் வைட்டமின் சி சத்தானது சிகப்பு குடமிளகாயில் உள்ளது. அதிலும் குடைமிளகாயை பச்சையாக உட்கொள்வது உடலில் பயோஃப்ளேவோனாய்டுகளைச் சேர்க்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
பூண்டு:
பலவகைகளில் மிகச்சிறந்த உணவாக பூண்டு கருதப்படுகிறது. பூண்டின் நோய்தடுப்பு குணத்தை அறிந்திருக்கும் நம் உணவு முறை, அதன் மருத்துவ குணங்களை அறிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது சீரான இரத்த ஓட்டத்திற்கும் பூண்டு உதவுகிறது.
ப்ராக்கோலி:
பூவைப் போன்ற தோற்றத்தில் சுவையின்றி இருக்கும் இந்த பச்சைக்காய்கறி பல சத்துக்களை உள்ளடக்கியது. இதில் உள்ள ஐசோதியோசைனேட்டுகள் ஈரலை ஊக்குவித்து என்ஜைம்கள் எனப்படும் நொதியூக்கிகள் சுரக்க வழி செய்து, புற்றுநோய் திசுக்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.
க்ரீன் டீ அல்லது கருப்பு டீ:
பாலிஃபீனால்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமுள்ள க்ரீன் டீ புற்றுநோய் செல்கள் பிரிவதை தடுக்கிறது. கருப்பு டீ எனப்படும் பால் கலக்காத டீயிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. அதிலும் பாலிஃபீனால்கள் அதிகமுள்ள க்ரீன் டீ வயிறு, நுரையீரல், குடல், ஈரல் போன்றவற்றில் ஏற்படும்
பால்:
மற்றும் பால் பொருட்கள் சீஸ், தயிர், பால் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம். ஒரு பகுதி பாலில் 8 அவுன்ஸ் கார்னிடைன் உள்ளது. அதுமட்டுமல்லாது கால்சியம், வைட்டமின் , வைட்டமின் டி போன்ற சத்துகளும் உள்ளன.
அவகேடோ பழம்:
நிரம்பாத கொழுப்புச் சத்துக்கள் அதிகம் உள்ள அவகேடோ பழம் இதயத்திற்கும், இரத்த நாளங்களுக்கும் வலு சேர்க்கிறது. அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பாதையை சீர் செய்கிறது.
மாட்டுக்கறி:
கார்னிடைன் அதிகமுள்ள மாட்டுக்கறியில் அமினோ அமிலம், புரதம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
தக்காளி:
செடிகளில் உள்ள லைகோபைன் எனப்படும் இயற்கையான வேதியியல் பொருள் தக்காளியில் அதிகம் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான இது விரை, நுரையீரல், வயிற்று புற்றுநோயை தடுக்கிறது.
ரெட் ஒயின்:
ஆல்கஹால் இல்லாத ரெட் ஒயினிலும் பல வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் பாலிஃபீனால்கள் உள்ளது. இது நோய் உண்டாக்கும் முடிவுறா மூலக்கூறுகளில் இருந்து காக்கிறது.
மாதுளை பழச்சாறு:
விரை புற்றுநோய்க்கு இது மருந்தில்லை என்றாலும் புற்றுநோயின் பரவலை தடுக்க உதவுகிறது. அதிலும் தினமும் 8 அவுன்ஸ் மாதுளை சாறு குடித்தால், விரையின் ஸ்திரத்தன்மை மேம்படும்.
முழு தானியங்கள்:
நம் உணவில் பெரும்பங்கு வகிக்கும் முழு தானியங்களில் ஜிங்க் சத்து நிறைய இருக்கிறது. ஆண்களின் ஆண்தன்மையை மேம்படுத்த உதவும் துத்தநாகம் உடலில் குறைந்தால், மலட்டுத்தன்மை ஏற்படும். எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.
வேர்க்கடலை:
வேர்க்கடலையில் துத்தநாகச் சத்து அதிகம் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதனை ஆண்கள் அதிகம் உட்கொண்டால், சரும வறட்சி, மலட்டுத்தன்மை, மூளை திசுக்கள் குறைபாடு ஆகியவற்றை தடுக்கலாம்.
மீன்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன் உணவானது புரதத்திலும் சிறந்து விளங்குகிறது. அதிலும் மீனில் உள்ள புரதச்சத்து, HDL எனப்படும் இதய நோய்களை தவிர்க்கும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
கேழ்வரகு:
கேழ்வரகில் கால்சியம் மிக அதிகமாக உள்ளது. அதாவது 300 கிராம் கேழ்வரகில் 100 கிராம் கால்சியம் உள்ளது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு நோய் வருவதை கேழ்வரகு தடுக்கிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து, டிஸ்லிபிடிமியா, நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது.
சியா விதைகள் (Chia seeds):
கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவான சியா, உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. அதே நேரம் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், திசுக்கள் குறைபாட்டை தவிர்த்து அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்களில் இருந்து காக்கிறது.
சோயா:
சோயாவில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் விரைப்பை புற்றுநோயை தடுக்கிறது. தினமும் 25 கிராம் சோயா சாப்பிடுவதன் மூலம் உடல் கொழுப்பை பெருமளவு குறைக்கலாம்.
பூசணி விதைகள்:
மொறுமொறுப்பான பூசணி விதைகளில் கலோரி அதிகமுள்ளது. 100 கிராம் பூசணி விதையில் 559 கலொரிகள் உள்ளன. மேலும் நார்ச்சத்து, தாதுக்களும், பலவகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன.
இளநீர்:
வெளியே கடினமாகவும், உள்ளே மிருதுவாகவும் உள்ள இளநீர், உடலின் மின்பகுளி அளவை சீராக வைக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றில் இருந்து காக்கிறது. மேலும் வயிற்றுப் போக்கின் மூலம் ஏற்படும் நீர் குறைபாடு ஆகியவற்றில் இருந்தும் காக்கிறது. அதுமட்டுமல்லாது மக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் நிரம்பி உள்ளன. கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் குறைபாட்டில் இருந்து பாதுகாக்கிறது.
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் நுண்ணியிர்கள் வளர்வதை தடுக்கின்றன. டைப்-2 நீரிழிவு நோயை தடுக்கவும் லவங்கப்பட்டை பயன்படுகிறது.