Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, September 29, 2016

வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால், வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும்

வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால், வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும் :

நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார். இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களை செய்து வந்தால், வீட்டில் செல்வம் கொட்டி செல்வந்தராகலாம். இதுக் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வியாழக்கிழமை விஷ்ணு பகவானை வணங்க, வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் அதிகரிக்கும்
வியாழக்கிழமை விஷ்ணு பகவானை வணங்க, வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் அதிகரிக்கும்
விஷ்ணு பகவானை வணங்குவது: 

வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்தப் பின், விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும்

தானம் : 

வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால், செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.

விரதம்: 

முடிந்தால் வியாழக்கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருங்கள். இதனால் செல்வந்தர் ஆகலாம்.

மஞ்சள் லட்டு :

சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை படைத்து வணங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகம் வந்து சேரும்.

வாழைமரம் :

வியாழக்கிமைகளில் வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதையேனும் படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

வாழைப்பழம்:

வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானம் வணங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும். 

சாமந்தி மாலை: 

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வம் பெருக செய்வார். 

மந்திரம்:

வியாழக்கிழமைகளில் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும்.

Tuesday, September 27, 2016

முன்னேற்றம் தரும் முப்பெரும் தேவியர் - நவராத்திரி வழிபாடு :

முன்னேற்றம் தரும் முப்பெரும் தேவியரை நவராத்திரி அன்று வழிபாடு செய்ய வேண்டும்.

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகும். இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோரை வழிபட வேண்டும். 

முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது. 

வளம் தரும் 9 நாள் நவராத்திரி விரத வழிபாடு

வளம் தரும் 9 நாள் நவராத்திரி விரத வழிபாடு : 

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.

முதல் நாள் : 

சக்தியை, முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல் வழிப்படுத்தவே ஆகும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.

இரண்டாம் நாள் : 

அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துப்பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்துப்பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். தயிர் சாதம் நிவேதனம் சிறந்தது.

மூன்றாம் நாள் :

சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரி பாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள். வெண் பொங்கலை நைவேத்தியம் செய்யலாம்.

நான்காம் நாள் : 

சக்தித் தாயை, வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும். எலுமிச்சை சாதத்தை அன்னைக்கு நைவேத்தியமாக படைப்பது நலம் தரும்.

ஐந்தாம் நாள் :

அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும். புளியோதரை நிவேதனம் சிறந்தது.

ஆறாவது நாள் :

அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள். தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.

ஏழாம் நாள்  : 

அன்று மகா லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங் களும் வந்து சேரும். கல்கண்டு சாதத்தை நிவேதனம் செய்யுங்கள்.

எட்டாம் நாள் : 

அன்று அன்னையை, நரசிம்கி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.

ஒன்பதாம் நாள் : 

அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூப மானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும். நைவேத்தியமாக அக்கார வடிசலை படைக்கலாம். 

VIT University's Yearbook 2015-16 in Online Now

VIT University : 

VIT University was established with the aim of providing quality higher education on par with international standards. It persistently seeks and adopts innovative methods to improve the quality of higher education on a consistent basis.The campus has a cosmopolitan atmosphere with students from all corners of the globe. Experienced and learned teachers are strongly encouraged to nurture the students. The global standards set at VIT in the field of teaching and research spur us on in our relentless pursuit of excellence. In fact, it has become a way of life for us. The highly motivated youngsters on the campus are a constant source of pride. 

VIT University in Vellore
VIT University in Vellore
Our Memoranda of Understanding with various international universities are our major strength. They provide for an exchange of students and faculty and encourage joint research projects for the mutual benefit of these universities. Many of our students, who pursue their research projects in foreign universities, bring high quality to their work and esteem to India and have done us proud. With steady steps, we continue our march forward. We look forward to meeting you here at VIT.

When I came to VIT, I was an individual with many interests. VIT offered me an opportunity to hone my talents and evolve into the best version of myself.

Thousands of memories, millions of heartfelt word.

We are pleased to announce the launch of the VIT University's Yearbook 2015-16, online.

VIT University's Yearbook 2015-16
VIT University's Yearbook 2015-16

Simply Just Visit at http://www.velloreinformation.in & Get VIT University's Yearbook 2015-16.

[OR]

For more information Visit Here : http://info.vit.ac.in/yearbook2015_16/files/assets/downloads/publication.pdf

Monday, September 26, 2016

உங்க ராசிக்கு எந்த தொழில் சிறப்பா அமையும்னு உங்களுக்கு தெரியுமா?

நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை வைத்து குறிக்கப்படும் ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த தகவல்களை அறிய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். 

உங்க ராசிக்கு எந்த தொழில் சிறப்பா அமையும்னு உங்களுக்கு தெரியுமா
உங்க ராசிக்கு எந்த தொழில் சிறப்பா அமையும்னு உங்களுக்கு தெரியுமா
ஆரம்பக் காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்த ஒரே தொழில் உளவு மட்டும் தான். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஒருவரே பல தொழில் செய்து முன்னேறும் அளவிற்கு உளவியல் மற்றும் அறிவியல் ரீதியாக மனிதர்கள் இன்று உயர்ந்து நிற்கின்றனர்.  ஒவ்வொரு ராசி காரர்களுக்கும் ஓர் பொதுவான குணாதிசயங்கள் இருக்கும் என்று நம்பப்படுவதை போல தான் இதுவும். நமது குணாதிசயங்கள் நமது உடல்நலம், உறவு மற்றும் தொழிலுடன் ஒத்துப் போகும்.

எனவே, இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களது இராசிக்கு ஏற்ப சில பொதுவான அடிப்படை தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. அவற்றை பற்றி இனிக் காண்போம்.

மேஷம் ராசி : 

மேஷம் ராசி
மேஷம் ராசி
மேஷ ராசிக்காரர்கள் இலட்சியம், உறுதி, இயக்க நிலை மற்றும் வெளிப்படையாக பேசுதல் போன்றவற்றில் சிறந்து காணப்படுவார்கள். வெளியிடங்களுக்கு சென்று வருதல், ஆக்டிவாக இருப்பது போன்றவற்றில் துடிப்புடன் இருக்கும் இவர்கள் காவல், ஊடகம் போன்ற துறையில் சிறந்து விளங்குவார்கள்.

ரிஷபம் ராசி :

ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி 
ரிஷப ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கும் மனோபாவம் கொண்டுள்ளவர்கள். மேலும் நிலையான வாழ்க்கையை விரும்பும் குணம் கொண்டவர்கள். பொறியியல், கணக்காளர், கணினி சார்ந்த வேலைகள், வழக்கறிஞர், மருத்துவம் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

மிதுனம் ராசி :

  மிதுனம் ராசி
மிதுனம் ராசி 
இவர்கள் ஒரே இடத்தில் அன்றாடம் செய்யும் சலிப்பான வேலைகளை செய்வதில் நாட்டம் காண்பிக்கமாட்டார்கள். வெளியிடங்களுக்கு சென்று சுற்றி சுற்றி செய்யும் வேலைகளே இவர்கள் விரும்புவர்கள். டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

கடகம் ராசி :

கடகம் ராசி
கடகம் ராசி
கடக ராசிக்காரர்கள் இயற்கையை விரும்பும் நபர்கள். சந்தோசமான சூழலுக்கு மத்தியில் வாழ விரும்புபவர்கள். கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

சிம்மம் ராசி : 

சிம்மம் ராசி
சிம்மம் ராசி
தலைமை குணம் மற்றும் எளிதாக மற்றவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். தனியாக எதையும் செய்து முடிக்க முனையும் பக்குவம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களை ஆள விரும்பமாட்டார்கள். முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்றவற்றில் இவர்கள் சிறந்து செயல்படுவார்கள்.

கன்னி ராசி :

கன்னி ராசி
கன்னி ராசி
குழுவாக வேலை செய்ய விரும்பும் நபர்கள் கன்னி ராசிக்காரர்கள். எதையும் கட்சிதமாக செய்து முடிக்க வேண்டும் என எண்ணுவார்கள். எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் இவர்கள் சிறந்து காணப்படுவார்கள்.

துலாம் ராசி :

துலாம் ராசி
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள் துடிப்பானவர்கள். மக்களை டீல் செய்வதில் வல்லவர்கள். வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிகம் ராசி :

விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி
இவர்களிடம் உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் அதிகமாக இருக்கும். எதையும் சொந்தமாக செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாக செயலாற்றுவார்கள்.

தனுசு ராசி :

தனுசு ராசி
தீர்கமான முடிவுகளை எடுப்பதில் தனுசு ராசிக்காரர்கள் சிறந்து செயல்படுவார்கள். நல்ல எண்ணத்தை தன்னை சுற்றி இருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள். மக்கள் தொடர்பு, திரைப்படம் / தொலைக்காட்சி, ஆசிரியர், போன்ற பணிகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

மகரம் ராசி :

மகரம் ராசி
மகரம் ராசி
நேரம் கடைபிடிப்பது, பணத்தை சரியாக முதலீடு செய்வது போன்றவற்றில் மகர ராசிக்காரர்கள் சிறந்தவர்கள். இவர்களுக்கு ஏற்ற பணிகள், மேலாளர்கள், ஆசிரியர், வங்கி, அரசு வேலைகள், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்றவை ஆகும்.

கும்பம் ராசி : 

கும்பம் ராசி
கும்பம் ராசி
புதிய ஐடியாக்களை வெளிப்படுத்துவது, எதிர்கால நோக்கத்துடன் செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள். ஒரே வேலையில் ஈடுபட விரும்பமாட்டார்கள். தொழில் புரிவது, கலை, கண்டிபிடிப்பு போன்றவற்றில் இவர்கள் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 

மீனம் ராசி : 

மீனம் ராசி
மீனம் ராசி
கற்பனை மற்றும் படைப்பு திறன் கொண்டவர்கள் மீனம் ராசிக்காரர்கள். மக்கள் தொடர்பு சார்ந்த வேலைகளில் சிறந்து செயல்படுவார்கள். உளவியல், மக்கள் மேலாண்மை, கலை போன்றவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.

மேலும், எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க http://velloreinformation.in க்ளிக் செய்யவும்

Thursday, September 8, 2016

உங்கள் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் பற்றி கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

2016-ல் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே வாக்குறுதிகள் அளித்திருந்தபடி பதவியேற்ற முதல் நாளே விவசாயிகளின் சிறு குறு கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டு அறிவிப்பும் வெளியிட்டார். 

உங்கள் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் :

தற்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ள பயனாளிகளின் விவரங்கள் கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் (www.tncu.tn.gov.in) or http://www.svnimaging.org/cooperative/ வெளியிடப் பட்டுள்ளது. 

விவசாய கடன் தள்ளுபடி விவரங்கள் பற்றி கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
கடன் தள்ளுபடி தொடர்பாக, ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கலாம்.  முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டதை தொடர்ந்து, கூட்டுறவு-உணவுத் துறை சார்பில் அரசு உத்தரவும், வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. கடன் தள்ளுபடி பெறுவதற்கு 16 லட்சம் பேர் தகுதி படைத்தவர்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தின் பெயர், கடன் பெற்ற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதை உள்ளீடு செய்தால், கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறியலாம்.  பட்டியலில், வரிசை எண், கடனின் வகை, கடன் பெற்றவரின் பெயர், சங்க உறுப்பினரின் எண், கடனின் எண், எந்த நோக்கத்துக்காக கடன் வாங்கப்பட்டது,நிலத்தின் அளவு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளோருக்கு  கடன் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஏதேனும் விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது கூடுதல் நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் சட்ட விரோதமாக பயன் பெற்றாலோ அது குறித்து அதிகாரிகளிடம் முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  கடன்கள் தொடர்பாக, வட்ட அளவில் முறையீடு செய்யும் காலம் முடிவடைந்துள்ளது. இதில் கோரிக்கைகள் ஏதும் ஏற்கப்படாவிட்டால், மாவட்ட பதிவாளர் அளவில் அடுத்த 2 வாரங்களுக்குள் முறையீடு செய்யலாம். அதிலும் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டால் இணைப்பதிவாளரிடம் மறு மேல்முறையீடு செய்யலாம். அக்டோபர் முதல் வாரத்துக்குள் அனைத்தும் மேல்முறையீடுகளும் செய்யப்பட்டு அவை தீர்க்கப்படும்.

கடன் வழங்கப்பட்ட தேதியில் 5 ஏக்கருக்குள் நிலம் இருந்திருப்பது அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும். மார்ச் 31-ஆம் தேதிக்குள் கடன் பெற்றோருக்கு மட்டுமே தள்ளுபடி திட்டம் பொருந்தும். அதற்குப் பிறகு யாரேனும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியிருந்தால் அந்தப் பணம் உரிய முறையில் விவசாயிக்கு கூட்டுறவுத் துறை அளிக்கப்படும். மேலும், கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு புதிதாக கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.