Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, December 1, 2016

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம், தீபத்திருவிழா டிச.12ல் கார்த்திகை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது.  நாளை கொடியேற்றம் நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்று. இந்தாண்டிற்கான தீபத்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை டிச. 3ல் கொடியேற்றம்

இதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. தினமும் இரவில் வெவ்வேறு வகையான வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 9-ந் தேதியும், 12-ந் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் கார்த்திகை தீப உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு துர்க்கை அம்மன் உற்சவமும், நேற்று இரவு பிடாரிஅம்மன் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிடாரிஅம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிடாரிஅம்மன் வீதிஉலா நடந்தது. பிடாரி அம்மன் சன்னதியில் இருந்து சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் உற்சவம் நடக்கிறது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா 2016 : 

திருவண்ணமலையில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 12ம் தேதி மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அண்ணாமலையார் கோயிலில், துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை நவம்பர் 30ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலையில் மகா தீபமும் ஏற்றப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை நவம்பர் 30ஆம் தேதி தீபத் திருவிழா காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதி வர உள்ளார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம், டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

தீபத்திருவிழா கொடியேற்றம்:

டிசம்பர் 3ஆம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 8ஆம் தேதி முற்பகலில் 63 நாயன்மார்கள் மாட வீதியுலா நடைபெறவுள்ளது.

மகா தேரோட்டம்: 

டிசம்பர் 9ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது. முதலில், விநாயகர் தேரோட்டம் காலை 6.05 - 7.05 மணிக்குள் புறப்படுகிறது. பின்னர் வள்ளி தெய்வானை சமேத முருகன், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு, மற்றொரு தேர் புறப்படும். காலை 6.30 மணியளவில் தொடங்கும், மகா தேரோட்டம் நள்ளிரவு நடைபெறும்

தீபத்திருவிழா:

அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 12ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர், அன்று மாலை ஐந்து மணியளவில் தீப தரிசன மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கிறார். அதனைத் தொடர்நது 2,668 உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தெப்ப உற்சவம்: 

இதையடுத்து, 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். மேலும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் டிசம்பர் 16ஆம் தேதி மாட வீதியுலா வந்ததும், கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து திருவண்ணாமலைக்கு 2,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

உலக பிரசத்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதால் அதனை முன்னிட்டு இன்று காலை அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ கோபுரம் முன்பு பந்தகால் நடப்பட்டது. ஏறாளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தீபத்திருவிழா தீபத்திருவிழா கார்த்திகை தீபத்திருவிழா
அங்கு சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் கூடி ஏகாந்தம் கண்டாடுவார்
நம்ம அண்ணாமலையப்பன் பெயரை சொல்லி சொல்லி பாடி அனந்த கூத்தாடுவார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

நாளை இரவு கார்த்திகை தீப திருவிழா அம்மன் உற்சவம் தொடங்குகிறது. நாளை காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதிஉலா நடக்கிறது.

1-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், 2-ந் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. 3-ந் தேதி காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றபடுகிறது

நாளை முதல் தினமும் சாமி வீதி உலா நடக்கிறது. 9-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை பரணி தீபம், மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மின் அங்காரத்தில் ஜொலிக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்று. இந்தாண்டிற்கான தீபத்திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

இதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. தினமும் இரவில் வெவ்வேறு வகையான வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 9-ந் தேதியும், 12-ந் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் சார்பில் நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் கார்த்திகை தீப உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு துர்க்கை அம்மன் உற்சவமும், நேற்று இரவு பிடாரிஅம்மன் உற்சவமும் நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பிடாரிஅம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிடாரிஅம்மன் வீதிஉலா நடந்தது. பிடாரி அம்மன் சன்னதியில் இருந்து சிம்மவாகனத்தில் புறப்பட்டு கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் உற்சவம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட உள்ளன. 16 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க படுகின்றன. மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தபட்டுள்ளது.

பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

No comments:

Post a Comment