Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Monday, August 22, 2016

அனைவருக்கும் வீடு திட்டம் ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை :

வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா உங்களுக்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளில் 2022-க்குள் ஐந்து கோடிக்கும் அதிகமான பேருக்கு வீடு கட்டி முடிக்க வேண்டும் என்று இத்திட்டம் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. நாம் இப்போது இத்திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பயன் பெறலாம் என்பது குறித்து இங்குப் பார்ப்போம்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா
அனைவருக்கும் வீடு திட்டம் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா 

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தை எப்படி பயன் பெறுவது?: 

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு :

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாகவும், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவாக உள்ளவர்களும் இத்திட்டத்தின் கீழ் வீட்டைக் கட்டுவதற்கான பல சலுகைகளைப் பெறலாம்.

சொந்தமாக இடம் :

உங்களிடம் வீடு கட்டுவதற்கான சொந்தமாக இடம் இருந்தால் போதும். உங்களுடன் இணைந்து அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டிவிடலாம்

இரண்டு அளவீடுகள் :

நீங்கள் வீடு கட்டப் போகும் இடம் 30 சதுர மீட்டராக இருந்தால் உங்களுடைய வருமானம் வருடத்திற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதுவே 60 சதுர மீட்டராக இருந்தால் உங்கள் வருமானம் 3 முதல் 6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வீட்டுக் கடன் :

இத்திட்டத்தின் மூலம் கடன் பெற்று வீடு கட்டுபவர்கள் 15 வருடத்திற்கு 6 லட்சம் கடனாக பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் இத்தொகைக்கான வட்டி விகிதத்தை அரசு 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.4,050 மட்டும் வட்டியாகச் செலுத்தி வந்தால் போதும். இதுவே வெளியில் கடனாக பெற்றால் 10.05 சதவீதம் வட்டியாகச் செலுத்த வேண்டும்.

ஊக்கத் தொகை :

பழங்குடியினர், பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் பெருமளவு ஊக்கத் தொகையை அரசு அறிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவினர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.3 லட்சம் வரை ஊக்கத் தொகை பெறுவர்.

சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் :

நன்கு கட்டப்பட்ட வீடு இல்லை என்று மட்டும் சான்றிதழ் பின்னர் வருமான சான்றிதழ் இவை இரண்டும் சமர்ப்பித்தல் வேண்டும்.

Friday, August 19, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டி : இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் 12 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம் என கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பெற்றுக் கொடுத்தார். பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் அரியானவை சேர்ந்த அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது குறித்து சாக்சி மாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் எனது கனவு நனவானது. இந்த சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணமாகும்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனையாக நானாக இருப்பேன் என்பதை நினைத்து பார்க்கவில்லை. மற்ற மல்யுத்த வீரர்களும் பதக்கங்களை பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

12 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம். இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததை நினைத்து நான் மிகவும் சந்தோ‌ஷம் அடைகிறேன். என் மீது அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் வெண்கல பதக்கத்தை எனது குடும்பத்தினர் மற்றும் எனது பயிற்சியாளர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



                                                        மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்

சாக்சி மாலிக் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றதால் அவரது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தனது மகள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதாக அவரது தாயார் சகேஷ் கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த சாக்சி மாலிக்கிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

இதில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் வில்வித்தை, தடகளம், டென் னிஸ், டேபிள் டென் னிஸ், துப்பாக்கி சுடுதல், பேட் மின்டன், குத்துச் சண்டை, மல்யுத்தம், நீச்சல், கோல்ப், ஜிம்னாஸ்டிக், துடுப்பு படகு, ஆக்கி, ஜூடோ, பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நாள் தோறும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? என்ற ஆவலில் ரசிகர்கள் இருந்தனர். 11-ம் நாள் போட்டி முடிவு வரை பதக்கம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், குத்துச்சண்டை, வில்வித்தை போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினர். துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கரம்கர், டென்னிசில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியினர் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டனர்.

இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 12-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.

மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் சாக்சி மாலிக் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். பெண் ஒருவர் மூலமே இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் கிடைத்தது.

சாக்சி மாலிக் தொடக்க சுற்றில் சுவீடனை சேர்ந்த ஜோகன்னா மேடிசனை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் மால்டோவா வீராங்கனை மரியானா செர்டிவாராவை தோற்கடித்தார்.

இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. டெக்னிக்கல் புள்ளி முறையில் அவர் வென்றார். ஆனால் சாக்சி காலிறுதியில் 2-9 என்ற கணக்கில் ரஷியாவை சேர்ந்த வெலேரியா கோப்லோவாவிடம் தோற்றார். தோல்வியை தழுவினாலும், வெலேரியா பைனலுக்கு முன்னேறியதால் ரீபேஜ் முறையில் சாக்சிக்கு வாய்ப்பு இருந்தது. ரீபேஜ் ரவுண்டில் 12-3 என்ற கணக்கில் ஒர்கான் பியூர்டேஜ்ஜை (மங்கோலியா) தோற்கடித்து வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதை தொடர்ந்து நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாக்சி மாலிக் கிர்கிஸ்தான் வீராங்கனை அய்சூலு டைனி பெகோவாவை சந்தித்தார். இதில் அவர் 8-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று வெண்கல பதக்கம் பெற்றார்.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் சாக்சி 0-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். போட்டி முடிய சில நிமிடங்களே இருந்ததால் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சாக்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை பெற்றார்.

முதலில் 5-5 என்ற சமநிலையை பெற்றார். போட்டி முடிய சில வினாடிகள் இருந்தபோது சாக்சி அபாரமாக செயல்பட்டு மேலும் 3 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்று இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்டார். தோல்வி நிலையில் இருந்து மீண்டு திறமையுடன் செயல்பட்டு சாக்சி பதக்கம் பெற்றுக் கொடுத்து புதிய வரலாறு படைத்தார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் ஆவார். இதற்கு முன்பு கர்ணம் மல்லேஸ்வரி (பளு தூக்குதல், 2000), மேரி கோம் (குத்துச்சண்டை, 2012), சாய்னா நேவால் (பேட்மின்டன், 2012) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று இருந்தனர்.

மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதற்கு முன்பு மல்யுத்த வீரர்கள் கசாபா யாதவ், சுசில்குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் பதக்கம் பெற்றுக்கொடுத்தனர்.

ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் ஆகும். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் 25-வது பதக்கம் இதுவாகும்.

இந்த வெண்கல பதக்கம் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க பட்டியலில் இடம் பிடித்தது. பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.

சாக்சி மாலிக் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுக்கொடுத்ததன் மூலம் நாடே குதூகலம் அடைந்துள்ளது. 120 கோடி இந்தியர்களுக்கு பெருமை தேடிக்கொடுத்த 23 வயதான அவர் அரியானா மாநிலம் ரோத்தக்கை சேர்ந்தவர்.

2014-ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளியும், 2015 தோகா ஆசிய விளையாட்டில் வெண்கலமும் பெற்று இருந்தார். தற்போது ஒலிம்பிக் பதக்கம் பெற்றதன் மூலம் அவர் மேலும் ஒரு மைல்கல்லை தொட்டார்.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்க தாகத்தை தீர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்சிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிக்கின்றன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டு மந்திரி கோயல், முன்னாள் மத்திய விளையாட்டு மந்திரி அஜய்மக்கான் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Wednesday, August 10, 2016

குருப்பெயர்ச்சி 2016 - 17 : மேஷ ராசிக்காரர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் ?

மேஷ ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சிக்கு என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மேஷராசிக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் ஆறாமிடத்திற்கு வருகிறார். கடந்த ஒரு வருடகாலமாக அவர் சிறப்பான இடமாக சொல்லப்படும் ஐந்தாமிடத்தில் இருந்தார். ஐந்தில் இருந்த குருபகவானால் நீங்கள் சென்ற வருடம் அதிக நன்மைகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால் மேஷத்தினரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு சென்ற வருடத்தில் நல்லபலன்கள் நடைபெறவில்லை. 

மேஷ ராசிக்காரர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்
மேஷ ராசிக்காரர்கள் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்
கோட்சாரரீதியில் இன்னொரு முக்கியகிரகமான சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டமச்சனியாக அமர்ந்து உங்களுக்கு நடக்க இருக்கும் நற்பலன்களை தடுத்து கொண்டிருக்கிறார். ஒருவருக்கு ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடக்கும் காலங்களில் மற்ற கிரகங்கள் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருந்தாலும் கூட நல்லபலன்கள் நடக்காது. இதற்கு குருபகவானும் விதிவிலக்கு அல்ல. 

எனவே ஐந்தாமிடத்தில் இருந்த குருபகவான் உங்களுக்கு நன்மைகளைத் தர இயலாது போனதைப் போல தற்போது ஆறாமிடத்திற்கு வரும் குருபகவானால் உங்களுக்கு தீமைகளையும் தர இயலாது. எனவே சனிபகவானுக்கு முதலிடம் கொடுத்து அவருக்குரிய பரிகாரங்களையும், அடுத்து குருபகவானுக்குரிய பரிகாரங்களையும் மேஷராசிக்காரர்கள் செய்து கொள்வது நல்லது.

மேஷத்தினர் அஷ்டமச்சனியின் தாக்கத்தினைக் குறைத்து சனியின் கெடுபலன்களில் இருந்து காத்துக்கொள்ள அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் அருள்பாலிக்கும் சிவனின் அம்சமான காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. இதற்கு நிகரான இன்னொரு பரிகாரமாக பழமையான பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் ராமபக்தனான ஸ்ரீஅனுமனின் பாதம் பணிந்து நெய்தீபம் ஏற்றுவதும் சனியின் ஆதிக்கத்தில் இருந்து உங்களை விடுவிக்கும். 

மேற்கண்ட இருவர்களில் காலபைரவர் சனியின் குருநாதர் என்பதால் குருவை மீறி சிஷ்யன் ஒன்றும் செய்ய முடியாது என்ற அடிப்படையிலும் இன்னொருவர் சனியால் வெல்ல முடியாத ஸ்ரீஅனுமன் என்பதாலும் இந்த பரிகாரத்தைச் செய்ய ஞானிகள் சொன்னார்கள் இவர்கள் இருவரையும் வழிபடும்போது “அய்யனே... உங்கள் நிழலில் ஒண்டிக் கொண்டு உங்களைச் சரணடைகிறேன். உங்களை சனிபகவானால் ஒன்றும் செய்ய முடியாததைப் போல என்னையும் சனியின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுங்கள்.” என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அஷ்டமச்சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்க முடியும். 

குருவுக்கான பரிகாரமாக ஏதேனும் ஒரு மாதத்தில் வரும் உங்களுடைய ஜென்ம நட்சத்திரமன்று கும்பகோணத்திற்கு அருகில் உள்ள குருவிற்கான முதன்மை ஸ்தலமான ஆலங்குடிக்கு சென்று வழிபடலாம். தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செந்திலாண்டவன் சூரபத்மனை முறியடித்த வெற்றிஸ்தலமான அலைகள் சீராட்டும் திருச்செந்தூருக்கு ஏதேனும் ஒரு செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் சென்று வழிபடலாம். 

Friday, August 5, 2016

இயற்கையான முறையில் வளர்ந்த ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்காது. நிறம், வடிவம், அமைப்பு போன்றவை மாறி இருக்கத்தான் செய்யும். இதை வைத்து ஆர்கானிக் என்று கண்டுபிடிக்கலாம். பருப்புகள் கூட ஒரே நிறத்தில் இல்லாமல், ஒரு பருப்பு அடர் நிறத்திலோ, இன்னொரு பருப்பு சற்று மங்கியோதான் இருக்க வேண்டும். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

இயற்கையான முறையில் வளர்ந்த ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி
இயற்கையான முறையில் வளர்ந்த ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி
ஆர்கானிக் பொருட்களை எப்படி வாங்கலாம்?  

தெருவுக்கு தெரு ஆர்கானிக் கடைகள், ஆனால் அது உண்மையில் ஆர்கானிக் கடைதானா என்பதில் பலருக்கும் சந்தேகம். விலையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு  மார்கெட்டிலேயே வாங்கி விடலாம், என்றே பலரது முடிவும் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் ஆர்கானிக் உணவுகளை வாங்குவதில், பல  சந்தேகங்கள் இருக்கின்றன.

*பெரிய அளவு பழமோ, காயோ, கிழங்கு வகைகளோ அவற்றை தவிர்த்து, சிறிய அல்லது மீடியம் அளவு உணவுகளையே வாங்குங்கள்.

*ஆப்பிள், மாம்பழம், திராட்சையில் அதிகப்படியான பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன என்பதால், இவற்றை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள். நேர்த்தியான, அழகான கனிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.

*சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.

*ஆர்கானிக் காய்கறிகளாக இருந்தால் அவை சீக்கிரம் வெந்து விடும். நேரம் அதிகமாக தேவைப்படாது.

* புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றில் அவற்றுக்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வர வேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. அதிக ஃபிரெஷ் எனில் சற்று சந்தேகப்படலாம்.

* தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.

*ஒன்றிரண்டு பூச்சிகள், வண்டுகள் இருந்தால் அந்த கீரையையோ, காய் கனிகளையோ தேர்ந்தெடுப்பது நல்லது. பூச்சிக்கொல்லி அடிக்காத உணவுப்பொருட்கள் என கண்டுபிடித்து விடலாம். பூச்சி முழுவதும் பரவி, அழுகி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

*ஒரு ஆர்கானிக் கடையில், இரண்டு பொருட்கள் மட்டும் வாங்கி சமைத்து பாருங்கள். சுவையை அறிந்து கொள்ளுங்கள். அது போல, மற்ற கடையில் உள்ள பொருட்களை வாங்கி சுவைத்துப் பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும். அதன் பிறகு உங்களின் ஷாப்பிங், இனிமேல் எங்கே என்பதை முடிவு செய்யலாம்.

*சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.

*கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பாரிலோ, கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்து போகாது.

*அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது  எனக் கேட்டால், தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

*பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.

*அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களிலும் கிடைக்கும்.

Thursday, August 4, 2016

ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன? இந்த பெயர்ச்சி எப்படி நிகழும்?

ஜாதகம் என்பது நட்சத்திர நிலைப்பாட்டை கொண்டு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும், அவர் பிறந்த நேரத்தை துல்லியமாக கொண்டு கணிக்கப்படுவது ஆகும். இந்த நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை கொண்டு தான் இந்து முறையில் ஒருவரது ராசி, நட்சத்திரம் போன்றவை குறிக்கப்படுகின்றன.இதை கொண்டு உருவாக்கப்படும் ஜாதகத்திற்கு என தனிப்பட்ட நன்மைகள், கேடுகளும் கூட கூறப்படுகிறது. இதை வைத்து, இவர்களது வாழ்வில் ஒவ்வொரு காலத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்பதையும் கூறுகின்றனர். மேலும், குரு பெயர்ச்சி, ராகு கேது பயிற்சி பலன்களும் கூட காலத்திற்கு ஏற்ப கூறப்படுகிறது.

ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன
ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன
இதில், ராகு கேது என்பது கேடு விளைவிக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. உண்மையில் ராகு, கேது பெயர்ச்சி என்றால் என்ன? இந்த பெயர்ச்சி எப்படி நிகழும்? என்பது குறித்து இனிக் காணலாம்.

ராகு கேது என்றால் என்ன? 

ராகு, கேது என்ற கிரகங்கள் மற்றவையோடு ஒப்பிடுகையில் மிகவும் வலிமையானவையாக கருதப்படுகின்றன. இவை இரண்டும் சேர்மங்கள், கனிமங்கள் என்பதில் வராது, வேதியியல் படி இவை இரண்டையும் கிரியா ஊக்கி என்று குறிப்பிடுகிறார்கள்

ராகு கேது இரண்டும் எந்த கிரகத்துடன் சேர்கிறதோ, அவற்றின் அடிப்படை குணத்தை பிரதிபலித்து பலன்கள் அளிப்பவை என ஜோதிட நிபுணர்களால் கூறப்படுகிறது. நல்ல கிரகங்களுடன் சேர்ந்தாள், நல்ல பலனும், தீய கிரகங்களுடன் சேர்ந்தாள் தீய பலனும் அளிக்கும் குணமுடையவை ராகுவும், கேதுவும்

தற்கொலை சம்பவங்கள், முயற்சிகள் கூட கேது புத்தியில் தான் அதிகம் நடக்கின்றன என்றும், ஜோதிட ஆய்வாளார்கள் குறிப்பிடுகின்றனர்.

அறிவியியல் பார்வை :

அறிவியியல் ரீதியாக பார்க்கையில் ராகு கேதுவை தூசு மண்டலமாக பார்க்கிறார்கள். அதாவது, ஆஸ்ட்ரைட்கள் போல மற்ற கிரகங்களின் துகள்களில் இருந்து வெளிப்படும் தொகுப்பு தான் ராகு, கேது என்று அழைக்கலாம்.

எல்லா கிரகங்களுக்கும் ஓர் சுற்றுப்பாதை இருக்கிறது. ஆனால், ராகு கேதுவிற்கு அப்படிப்பட்ட சுற்றுப்பாதை ஏதுமில்லை. எனவே, தான் இவை இரண்டையும் நிழல் கிரகங்கள் என குறிப்பிடுகின்றனர்.

ராகு, கேது இந்த இரண்டு கிரகங்களுக்கும் தனிதனி பாதைகள் இல்லை என்றும், இவை என்றும் ஒரே பாதையில் தான் பயணிக்கின்றன என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுவாக புயல் காற்று வீசும் போது பூமியில் ஒரு பகுதி தூசும், வானில் ஒரு பகுதி தூசும் சுழலும், இதே தான் ராகு கேதுவின் வாகு என்றும் கூறப்படுகிறது.

வால் நட்சத்திரங்கள்:

வால் நட்சத்திரங்களும் கூடதூசுகளின் தொகுப்பு தான். இவற்றில் கார்பைன், கார்பன் மோனாக்சைடு போன்றவை இடம்பெற்றிருக்கும். இவற்றின் மீது ஒளிக் கற்றைகள் படும்போது, அதன் பிரதிபலிப்பால் இவை மின்னுகின்றனர்.

நிரந்தமற்றது :

இந்த மின்னும் தன்மை நிரந்தமற்றது, தோன்றி மறைந்துவிடும். எனவே, வால் நட்சத்திரங்களும் கூட ராகு, கேது குடும்பம் / பிரிவை சேர்ந்தவை என வைத்துக் கொள்ளலாம்.

ஜிஎஸ்டி (GST Bill - Goods Services Tax) மசோதாவால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும் & விலை குறையும்?

ஜிஎஸ்டி (GST Goods and Services Tax Bill) மசோதா :

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது. புதன்கிழமை இன்று ராஜ்ய சபாவில் ஜிஎஸ்டி மசோதா பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. 

சுதந்திரம் பெற்ற பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தம் மற்றும், ஒரு தேசம் ஒரு வரி ஆட்சி என 29 மாநிலங்களுக்கும் ஒரே வரியாக வர இருக்கிறது ஜிஎஸ்டி. இதற்காக 29 மாநில முதல்வர்களும் அவர்கள் கட்சியின் அவை உறுப்பினர்களை கண்டிப்பாக இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். 

எனவே இந்த முறை எப்படியும் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஜிஎஸ்டி வரியால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும் & விலை குறையும்? என்பது பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

How GST may Effect  Consumer
How GST may Effect  Consumer
விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படும் பொருட்கள் : 

ஆட்டோமொபைல் :
சிறிய ரக கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள், எஸ்யூவி-கள் பொன்ற வாகனங்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார் பேட்டரி:
கார் பேட்டரிகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

திரைப்பட டிக்கெட்:
திரைப்பட சீட்டுகளுக்கான கேளிக்கை வரி மிக அதிகமாக உள்ளது, ஜிஎஸ்டி 18 சதவீதமாக இருக்கும் போது மல்டிப்ளக்ஸ் போன்ற நிறுவனங்களும் விலையைக் குறைத்தல் டிக்கெட் விலை குறைய வாய்ப்புள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்கள்:
ஃபேன், லைட், வாட்டர் ஹீட்டர், ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறையலாம்.

GST Bill - Which are Costly & Cheaper Items
GST Bill - Which are Costly & Cheaper Items
விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படும் பொருட்கள் : 

புகையிலை:
புகையிலை மீதான ஜிஎஸ்டி விகிதம் அதிகப்படுத்துவதால் புகையிலை பொருட்கள், சிக்ரெட் விலை உயர வாய்ப்புள்ளது.

வணிக வாகனங்கள் :
ட்ரக், பேருந்து பொன்ற வணிக வாகனங்கள் விலை உயரும்

சேவை வரி:
சேவை வரி உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மொபைல் பில் கட்டணங்கள் உயரும்.

ஆடம்பர பொருட்கள்:
ஜவுளி, ஆடம்பர நகை போன்ற பொருட்கள் விலை உயரலாம்.