Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, October 27, 2016

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஆணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தி்ல் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam Hall-Ticket Download
TNPSC Group 4 Exam Hall-Ticket Download
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு நவ.,6 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளன.

TNPSC Group 4 Exam Hall-Ticket Download:

இந்த ஹால்டிக்கெட்டை தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, டி.என்.பி.எஸ்.சி., இணையதளங்களான www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

How to Download TNPSC Group 4 Exam Hall Ticket
How to Download TNPSC Group 4 Exam Hall Ticket

ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதாவர்கள் : 

ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதாவர்கள் contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு பணம் கட்டிய ரசீதுடன் அக்., 31 தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

Monday, October 24, 2016

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்? தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் :

அனைவருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்திருக்கும். இந்தப் பணத்தை கொண்டு பலரும் தங்கத்தை வாங்கி வைப்பார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND)  விற்பனையை இன்று (அக்டோபர் 24, 2016) தொடங்கி இருக்கிறது. இந்த பாண்டுகளில் நவம்பர் 2, 2016 வரை முதலீடு செய்யலாம்.

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்?

வழக்கத்தை விட, தீபாவளிக்காக 10 கிராம் தங்க பாண்டு முதலீட்டுக்கு ரூ.500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமம் கூட வாங்கலாம். அதற்கும் இந்த தள்ளுபடி (கிராமுக்கு ரூ.50) கிடைக்கும்.

பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்
பாண்ட் முதலீடு : இதர தங்கத் திட்டங்களை விட சிறந்தது ஏன்
தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக கொடுக்க மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்த கோல்டு பாண்டு முதலீடு, இதர தங்கத் திட்ட முதலீடுகளை விட ஏன் சிறந்தது என்பதை பார்ப்போம்.

தங்கத்தில் முதலீடு செய்ய ஆபரணம், தங்க நாணயம், கோல்டு இடிஎஃப் (காகித தங்கம்), கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் என பல வழிகள் உள்ளன.

1. ஆபரணத்தங்கம் வாங்கும் போது செய்கூலி, சேதாரம் இருக்கும். இது கோல்டு பாண்டில் கிடையாது.

2. ஆபரணத் தங்கம், நாணயம் விற்கும் போது சேதாரம், பழைய நகை என்று விலை குறைக்கப்படும். கோல்டு பாண்டுக்கு அப்போதைய தங்கத்தின் விலை குறையாமல் கிடைக்கும்.

3. கோல்டு இடிஎஃப், கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட்களில் நுழைவு கட்டணம், நிர்வாகக் கட்டணம் உண்டு. கோல்டு பாண்டு திட்டத்தில் இந்தக் கட்டணங்கள் எதுவும் கிடையாது.

4. கோல்டு பாண்டில் ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி  கிடைக்கும். ஆபரணம், தங்க நாணயம், கோல்டு இடிஎஃப் (காகித தங்கம்), கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் விலை ஏற்றம் மட்டுமே லாபம்.

5. தங்க முதலீட்டு திட்டங்களில், கோல்டு பாண்டுக்கு மட்டும்தான் மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் :

தங்க முதலீடு மூலம் லாபம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக  தங்க கடன் பத்திர (SOVEREIGN GOLD BOND) முதலீடு இருக்கிறது. இதன் ஐந்தாம் கட்ட தங்கப் பத்திர வெளியீடு, தொடங்கி உள்ளது . இதில் செப்டம்பர் 9 வரை முதலீடு செய்யலாம்.

தங்க கடன் பத்திர முதலீடு கவனத்தில் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

அதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான 10 முக்கிய காரணங்களை பார்ப்போம்.

1. இப்போது ஒரு கிராம் மதிப்புள்ள தங்க கடன் பத்திரத்தில் கூட முதலீடு செய்யலாம். ரூ. 3150 (24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை) இருந்தால் முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும்.  தேவைக்கு ஏற்ப இந்த தங்க கடன் பத்திரங்களை 1, 5, 10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில் வாங்கலாம்.

2. நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) ஒருவர் அதிகபட்சம் 500 கிராம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

3. இந்தத் தங்க கடன் பத்திரங்களை காகித வடிவில் அல்லது டீமேட் (எலெக்ட்ரானிக்) வடிவில் நமது வாய்ப்பு வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

4. முதலீட்டு நோக்கில் தங்க நகையாக வாங்கும் போது உள்ள செய்கூலி, சேதாரம்  இதில் இல்லை.

 5. ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.75% வட்டி வருமானமாக  கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.75% வட்டி  கிடைக்கும். வட்டி 6 மாதத்துக்கு ஒரு முறை தரப்படும்.

6. தபால் அலுவலகங்கள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள்,  பாம்பே பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) இந்த பத்திரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன என்பதால் முதலீடு செய்வது எளிது.

7.  பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இந்த தங்க கடன் பத்திரங்கள் மீது வர்த்தகம் நடப்பதால் பணத் தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள முடியும்.

8. மூலதன ஆதாய வரி (கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்) கிடையாது.

9. முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும். இந்த தங்க கடன் பத்திரங்களை கடன் வாங்கும் போது அதற்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

10. ரூ. 20,000 வரையிலான முதலீட்டுக்கு ரொக்கப் பணமாக செலுத்தலாம்.  இதற்கு மேல் என்றால் டிடி, செக் கொடுக்கலாம்.  ஆன்லைன் மூலமும் முதலீடு செய்ய முடியும்.

இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக தர மாட்டார்கள். முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கு ஜோதிடப்படி உங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்?

உங்கள் ராசிக்கு ஜோதிடப்படி உங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் : மேஷம் ராசி – மீனம் ராசி : 

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்த ஆண் மகன் தனது மனைவியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவான். தனது துணையின் மீது அதிகளவிலான பாசத்தை பொழிவான். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சினை ஏற்படும். தனது மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆனால் அப்படி அமையப்பட்டால் மனைவி மீது அதிக சந்தேகம் கொண்டவராகவும் மேஷ ராசிக்காரர் திகழ்வார். இதனால் இவர்களுக்குள் தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.

ரிஷபம்:

இந்த ராசிக்காரர்களுக்கு விருச்சக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். அதேபோல கன்னி ராசி காரர்களுடன் வாழ்க்கை அமையும். இவர்களிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் துன்பம் நிலவிக் கொண்டிருக்கும்.

உங்கள் ராசிக்கு ஜோதிடப்படி உங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்?
உங்கள் ராசிக்கு ஜோதிடப்படி உங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்?
மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பு காட்டுவார்கள். இதனால் சிலருக்கு காதல் தோல்வியும், திருமண பந்தம் முறிவதும் நிகழ வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் இவர்களது வாழ்க்கை சிறக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர் தனது துணையை தனக்கு நிகராக பாவிப்பார். சுதந்திரத்தை அதிகம் விரும்புபவராக இருப்பார். மனைவியின் அதிகாரத்தையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள மாட்டார். சில சமயம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் பிரச்சினையை எதிர்கொள்வர். தனது துணை மற்றவர்களுடன் பேசுவதையோ பழகுவதையோ விரும்பமாட்டார்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டுவர். இவர்கள் சிறந்த கணவராக இருப்பார். இவர்களது மண வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அடிக்கடி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும். திருமண தோஷம் இருக்க வாய்ப்புண்டு. சிம்ம ராசிக்காரர்கள் பழகுவதற்கு கடினமானவர்கள். எளிதில் கோபம் வந்துவிடும். கோபம் வந்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள். பிரியமானவர்களிடம் அதிகம் கோபப்படுவர். கோபத்தை குறைத்தால் மண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

கன்னி:

கன்னி ராசி காரர்களுக்கு மகர ராசி, விருச்சிக ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் வாழ்வில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசி உடையவர்களுடையவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.

துலாம்:

தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பது உத்தமம்.கனவு அதிகம் வரும். ஒரு குழந்தை பெற வாய்ப்புண்டு. துணைவியின் ஆலோசனையை கேட்டல் நலம். இரண்டு கல்யாணம் செய்யும் வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு காதல் தோல்வி ஏற்படும்.

விருச்சகம்:

விருட்சிக ராசிக்காரர் தனது துணையை மிகவும் விரும்புவர். தனது துணையை ஒரு காதலர்/காதலியைப் போல பாவித்து காதல் வாழ்க்கை வாழ்வர். தனது துணையை எல்லா விதத்திலும் திருப்தியாக வைத்திருப்பர். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி மிகச் சிறந்த காதல் வாழ்வை அனுபவிப்பர்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு அமையும் துணைவி குணவதியாகவும், உழைப்பாளியாகவும், அமைதியானவளாகவும் இருப்பார். இவர்களது திருமண வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும். தனு ராசி கணவர் பெண்மையை மதிப்பவராக இருப்பார். கூச்ச சுபாவம் இருப்பவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்காது. தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர். தனது துணையை சமமாக எண்ணுவர். இவர்களுக்கு காதல், திருமணம் எல்லாமே சிறப்பாக அமையும். விரைவிலேயே திருமணம் நடைபெறும்.

உங்கள் ராசிக்கு ஜோதிடப்படி உங்கள் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் மேஷம் - மீனம் ராசி
மகரம்:

மகர ராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். இவர்கள் இல்லற வாழ்க்கையின் இனிமையானதொரு பகுதியை ரசித்துக் கொண்டிருப்பர். காதல், திருமணம் இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காக இருக்கும். இவர்களுக்கு நண்பர்களும், காதலர்/காதலி, துணைக்கு முக்கியத்துவம் தருவர்.

கும்பம்:

தனக்கென ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு வாழ்பவர். இதனை தனது துணையும் கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புவார். இவர் பழகுவதற்கு இனிமையானவர். மன தைரியம் மிக்கவர். தனது துணையை மிக மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கும்ப ராசிக்காரரின் காதல் மற்றும் தாம்பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும். இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பர். மிதுனம், துலாம், விருட்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை இவர்கள் துணையாகக் கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும். இவர் நல்ல காதலராகவும், துணையாகவும் இருப்பார் என்பது நிச்சயம்.

மீனம்:

மீன ராசிக் காரர்களுக்கு ஒன்றிலிருந்து பல திருமணங்கள் நடைபெறும் முதல் திருமணத்தில் நிம்மதியின்றி மறுமணம் செய்து சுகத்துடன் வாழக் கூடியவர்.

Thursday, October 20, 2016

ரூ.3 செலவில் ரயில் டிக்கெட் முன்பதிவு

புதுடில்லி: 

ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாமலும், இன்டர்நெட் இணைப்பு இல்லாமலும், மூன்று ரூபாய் செலவில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி துவங்கப்பட்டு உள்ளது.

IRCTC யின் இணையதளம் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி டிக்கெட் பதிவு செய்யலாம்.
IRCTC யின் இணையதளம் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி டிக்கெட் பதிவு செய்யலாம்.
இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் :

இந்திய ரயில்வேயின் இணை நிறுவனமான, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் என்னும், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளம் மூலம், வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது, இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே, பயணிகள், தங்கள் மொபைல் போனில் இருந்து, '139' என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி துவங்கப்பட்டு உள்ளது. 

எஸ்.எம்.எஸ்., மூலம் : 

இதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் கணக்கு வைத்திருக்கும் வங்கியுடன் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்த பயணிகள், தங்கள் மொபைல் போனில் இருந்து, '139' என்ற எண்ணுக்கு டிக்கெட் முன்பதிவு குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, டிக்கெட் பதிவு செய்யலாம். இதேபோல், டிக்கெட்டையும் ரத்து செய்ய முடியும்.

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்?

சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கர்ப்பம் என்பது ஒரு தம்பதியின் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான கட்டமாகும். பிறக்க போகும் குழந்தையை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கு பிரசவ நேரம் நெருங்க நெருங்க, உணர்ச்சியும் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். இது இயல்பான உணர்வே. மகப்பேறு மருத்துவர்களின் படி, முழுமையான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முழுதாக 9 மாதங்கள் தேவைப்படும். இந்த ஒன்பது மாதங்களில் குழந்தையை எதிர்ப்பார்க்கும் தாயும் அந்த குடும்பமும் பல சந்தோஷமான மற்றும் சோகமான தருணங்களை சந்திக்க வேண்டி வரும். ஆனால் பிரசவம் என வந்து விட்டால், அது தான் மிகவும் வலிமிக்கதாகும்.

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்?
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்?
பிரவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு, பிரசவத்திற்கான கட்டம் மிகவும் கொடுமையானதாக இருக்கும். ஆனால் அதன் முடிவில் விலை மதிப்பில்லாதா அந்த பச்சிளம் குழந்தையை கையில் தூக்கும் போது அனைத்து வலியும் மறந்து சந்தோஷ வெள்ளத்தில் மிதந்திடுவர்.

யாருக்கெல்லாம் சுகப்பிரசவம் நிகழும்?

பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் சுகப்பிரசவம் நிகழும். ரொம்பவும் குள்ளமாக - அதாவது, 145 செ.மீக்கும் குறைவாக - உள்ள பெண்களுக்கு மட்டும்  சுகப்பிரசவம் நிகழும் எனக் காத்திருக்கக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். போலியோ தாக்கியவர்கள், இடுப்பெலும்பில் பாதிப்புள்ளவர்கள்,  முதுகெலும்பு வளைந்து, கூன் விழுந்தவர்களுக்கும் சுகப்பிரசவம் அனுமதிக்கப்படுவதில்லை. சாதாரணமாக ரத்த அழுத்தம் 120/80 என்றிருந்தால்,  சிலருக்கு பிரசவத்தின் போது அது 160/100 அல்லது 160/120 என எக்குத் தப்பாக எகிறும்.  அதன் விளைவாக அவர்களுக்கு வலிப்பு வரலாம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்கலாம் என்பதால், அவர்களுக்கும் சுகப்பிரசவம்  அனுமதிக்கப்படுவதில்லை.அளவுக்கதிக குண்டாக இருந்தாலும்  - அதாவது 100 கிலோ, 120 கிலோ எடை இருக்கும் பெண்களுக்கும் - சுகப்பிரசவம்  நிகழும் வாய்ப்புகள் குறைவு. 

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?

சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள்.  கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள். இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து  விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை  பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை. 

கிராமங்களில் பிரசவ நாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய்  மாதிரிப் பார்க்கிறார்கள். நின்றால் ஆகாது... நடந்தால் ஆகாது... இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி  இருக்கிறது,உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். இடுப்பெலும்பு விரிய  ஆரம்பிக்கும். 

பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன்  சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும். சிலருக்கு பிரசவ தேதி  நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய்  விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும்.

பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்
பெண்கள் சுகப்பிரசவம் நடக்க எளிய வழிமுறைகள்
சிசேரியன் முறையில் பிரசவம் என்றால் சுகப்பிரசவத்தில் ஏற்படும் அளவு வலி ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் பிரசவத்திற்கான முறையும் கட்டங்களும் மாறுபடும். சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை பிரசவம் என்றால் கர்ப்பிணி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இது முதுகு தண்டு வழியாக செலுத்தப்படும். இந்த மயக்க மருந்து உடலின் கீழ் பகுதியை மரத்து போக செய்துவிடும். அதன் பின் 15 நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுத்து விட வேண்டும்.

சுகப்பிரசவத்தில் ஒரு கர்ப்பிணி பெண் கடக்க வேண்டிய மூன்று கட்டங்களை அவர் அறியாமல் இருந்தால், இந்த கட்டுரை அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பிரசவ வலிக்கான அறிகுறி மற்றும் அதன் நீளத்தைப் பற்றி தாயாகப் போகும் பெண்கள் மேலும் படித்து தெரிந்து கொள்ளவும்.

பிரசவத்திற்கான அறிகுறி:

கருப்பையில் அழுத்தம் அதிகரிக்கும் போது, ஆற்றல் திறன்களில் மாற்றம் ஏற்பட்டு இரத்தம் கலந்த சளி வெளியேறினால், கருவில் உள்ள குழந்தை வெளியேறுவதற்கான நேரம் இது. சுருக்கங்களின் நேரத்தை குறித்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். 

பிரசவத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்:

பிரசவத்தின் முதல் கட்டம் :

பிரசவத்தின் முதல் கட்டம் என்பது பிரசவத்தின் தொடக்கமாகும். இந்த கட்டத்தில் கருப்பை வாய் முழுமையாக விரிவாகும். பிரசவத்தின் முதல் கட்டத்தை மேலும் மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்: ஆரம்ப பிரசவம், தீவிர பிரசவம், இடைநிலை பிரசவம்.

ஆரம்ப பிரசவம் :

பிரசவ கட்டங்களில் மிகவும் வலிமிக்கதாக இருப்பது இந்த கட்டம் தான். இந்த நேரத்தில் தான் கருப்பை வாய் சன்னமானதாக மாறி, விரிவடையும். கருப்பை வாய் குறைந்தது 3-4 சென்டிமீட்டர் வரை விரிவடைய வேண்டும். ஆரம்ப பிரசவ கட்டம் என்பது சில வாரங்கள், நாட்கள் மற்றும் சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம்.

தீவிர பிரசவம் :

பிரசவத்தின் இந்த கட்டத்தில், சுருக்கமும் வலியும் தீவிரமடையும். கருப்பை வாய் 10 சென்டிமீட்டருக்கு விரிவடையும்.

இடைநிலை பிரசவம் :

இடைநிலை பிரசவ கட்டத்தில், சுருக்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும். இது 2-3 நிமிடங்களுக்குள் நடந்து முடியும். ஒவ்வொரு கட்டத்திலும், வலியும் சுருக்கங்களும் தலா 90 நொடிகள் வரை நீடிக்கும்.

பிரசவத்தின் இரண்டாம் கட்டம் :

பெரும்பாலான தாய்மார்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கட்டம் தான் இது. இந்த கட்டத்தில், கருப்பை வாய் முழுமையாக விரிவடைந்து விடும். கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு தயாராகிவிடும். பிரசவத்தின் இந்த கட்டத்தில் உள்ள பெண்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியைப் பொறுத்துக் கொண்டும் இருக்க வேண்டும். (குழந்தையின் தலை பெண்ணுறுப்பில் இருந்து வர தொடங்கியவுடன் அந்த பெண்ணிற்கு அவளின் கருப்பையில் லேசான எரிச்சலும் கூச்ச உணர்வும் ஏற்படும்).

பிரசவத்தின் மூன்றாம் கட்டம் :

நஞ்சுக்கொடியை பிரசவித்தல் – குழந்தையைப் பிரசவித்த பிறகு, கருப்பையில் இருந்து நஞ்சுக்கொடியையும் எடுத்தாக வேண்டும். பிரசவத்தின் இந்த கட்டத்தை சிலர் “இரண்டாம் குழந்தையின் பிரசவம்” என்றும் அழைக்கின்றனர். இந்த கட்டத்தின் போது, லேசான சுருக்கங்களைப் பெண்கள் அனுபவிக்க வேண்டி வரும். கருப்பை சுவரில் இருந்து நஞ்சுக்கொடி தானாக பிரிந்து கொள்ளும். பின் பெண்ணுறுப்பின் வழியாக வெளியேறும். அதன் பின் அறுவை சிகிச்சை வாயிலாக அதனை வெட்டி நீக்கி விடுவர்.

வீட்டு பட்ஜெட் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்?

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி :

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது.

ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது?

நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

வீட்டு பட்ஜெட் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்
வீட்டு பட்ஜெட் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்
1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.

2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.

ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.

6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே.

Wednesday, October 19, 2016

அரசு பள்ளி சத்துணவை மாணவர்களுடன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த திருவண்ணாமலை கலக்டர் குவியும் பாராட்டுக்கள்

அரசு பள்ளி சத்துணவை மாணவர்களுடன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த திருவண்ணாமலை கலக்டர், குவியும் பாராட்டுக்கள்,  இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது படியுங்கள்.


அரசு பள்ளி சத்துணவை மாணவர்களுடன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த திருவண்ணாமலை கலக்டர்
அரசு பள்ளி சத்துணவை மாணவர்களுடன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த திருவண்ணாமலை கலக்டர் 
சம்பவம் 1 :

திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம், தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் (ரிங் ரோடு அருகில்) கடந்த 11ம் தேதி மாலை 5:30 மணியளவில் பைக்கில் தன் குடும்பத்துடன் ஒருவர் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அவர் நிலை தடுமாறி பைக்கிலிருந்து தன் குடும்பத்துடன் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் காரிலிருந்து இறங்கினார்.

பின்னர், வலிப்பினால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்த அந்த வாலிபரை முதலுதவி அளித்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தன் காரிலேயே ஏற்றிக்கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

சம்பவம் 2 :

சக ஊழியர்களுடன் பூங்கா பகுதியில் புல்வெளியில் அமர்ந்து சகஜமாகவும், வேறுபாடு இல்லாமலும் மதிய உணவு சாப்பிட்டார் திருவண்ணாமலை ஆட்சியர் பிரசாந்த்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ள ஆட்சியர் பிரசாந்த் அவர்களுக்கு ‘சபாஷ்’ தெரிவிக்கலாமே!

சம்பவம் 3 :

திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் சத்துணவு தரமாக சமைத்து கொடுப்பது இல்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து அந்த பள்ளியில் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாணவர்களுக்ககாக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதனை பள்ளி மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

பிரசாந்த் தான் ஆட்சியர் என பெரிதாக நினைக்காமால் நாளுக்கு நாள் அவர் மிக எளிமையாக நடந்து கொள்ளும் இது போன்ற விஷயங்களும் சமூக அக்கரையுடன் நடந்து கொள்ளும் விதமும் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


சமூக வலைதளங்களில் ஆட்சியர் பிரசாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

மனதார பாராட்டுகி்ன்றோம்.

நல்லவர்களை ரொம்ப நாளைக்கு இந்த அரசியல் வாதிகள் பணியில் வைத்துக் கொள்ள மாட்டார்களே .

நீண்ட நாள் பணியில் இருந்து மக்களுக்காக பணியாற்ற வாழ்த்துகின்றோம்.

இனி சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க புது திட்டம் : தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிப்புகளை தடுக்கும் வண்ணம், அதிக வளைவு மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட விவரங்களை சென்னை, ஐஐடி உதவிப் பேராசிரியர் கீதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சாலைகள் விவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் 69 ஆயிரத்து 59 விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்தில் 15 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்து - உயிரிழப்புகளின் விவரங்களை, மாவட்ட வாரியாக பார்க்கும்போது சென்னை மாவட்டத்தில் அதிகளவில் உயிரிழப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 7 ஆயிரத்து 336 விபத்துகளில் 889 பேர் இறந்துள்ளனர். கோயம்புத்தூரில் 4 ஆயிரத்து 54 விபத்துகளில் 962 பேர் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இனி சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க புது திட்டம்
இனி சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க புது திட்டம்
சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க புது திட்டம் : தமிழக அரசு முடிவு :

இந்த நிலையில், தமிழகத்தில் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் 10 மாவட்டங்களில் உள்ள குறுகிய, அதிக வளைவுகள் கொண்ட பட்டியலை சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் கீதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துகளும், இறப்புகளும் அதிகரித்து விட்டன. வளர்ந்த நாடுகளில் போக்குவரத்துத் துறையில் அறிவுசார்ந்த புதிய முறைகளைப் பயன்படுத்துவதுபோல தற்போது நம் நாட்டிலும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் 10 மாவட்டங்களை தேர்வு செய்து, தற்போது ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளோம். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக் கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஐஐடி மாணவர்கள் 20 பேர் கடந்த 10 நாட்களாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் குறுகிய, அதிக வளைவுகள் கொண்ட சாலைகளின் பட்டியல் தயாரித்துள்ளோம். நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான சந்திப்பு இடங்களில் அங்குள்ள சாலையின் நடுப்பகுதியில் இருக்கும் தடுப்புகளை அகற்றிவிட்டு, உள்ளூர் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதனால், நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிக விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த ஆய்வின் முழு அறிக்கையை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் காவல்துறை, போக்குவரத்துத் துறையிடம் அளிக்கவுள்ளோம். இந்த அறிக்கை மூலம் நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ள வேண்டிய புதிய கட்டுமானப் பணிகள், போக்குவரத்து வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு புதிய திட்டங்களை வகுக்க பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு கீதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

Tuesday, October 18, 2016

மத்திய அரசாங்கம் பொது சிவில் சட்டம் கொண்டு வர எதிர்ப்பு ஏன்? பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறதா பொது சிவில் சட்டம்?

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மக்களிடம் அரசு கருத்துக் கேட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு சிறுபான்மை நலக் குழுக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. கிட்டத்தட்ட சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு நியமிக்கப்பட்டது தொடங்கியே விவாதத்துக்கு உள்ளான சட்டம். 1949-ல் நேருவின் அமைச்சரவை இருந்தபோது பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது ஷரத்து பரிந்துரை செய்தது. அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தன்முனைப்புடன் இருந்தார். 

பொது சிவில் அல்லது பொது உரிமையியல் சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் எந்த ஒரு மத இன சமய பண்பாட்டைத் தழுவிய தனி நபருக்கும் பொதுவிலான உரிமை மற்றும் தண்டனை முறை விதிக்கப்படும். ஆனால், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்கிற அடையாளமும், 15 கோடி இஸ்லாமிய மக்கள் வாழும் சிறுபான்மையினர் சமூகமும் கொண்டதாக இருக்கிறது. எனவே, பொது சிவில் சட்டம் என்பது தனிநபர் சார்ந்த மத ஒழுக்கங்களுக்கும் கட்டமைப்புகளுக்கும் எதிராக இருப்பதாக முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சிகள் பல காலங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறதா பொது சிவில் சட்டம்
பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறதா பொது சிவில் சட்டம்
எதிர்ப்பு ஏன்?

1985-ல் சாஹாபானு என்கிற 73 வயது பெண்ணை அவரது கணவர் முகமதுகான் என்பவர் 40 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி மூன்று முறை தலாக் கொடுத்து விவாகரத்து செய்தார். அதோடு மட்டுமில்லாமல், அந்தச் சட்டத்தின்படி பானுவுக்கான ஜீவனாம்சமும் நிராகரிக்கப்பட்டது. இத்தனைக்கும் பானுவின் கணவர் முகமதுகானும் வழக்கறிஞர்தான். இந்தத் தலாக்குக்கு எதிராக பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு பானுவுக்குச் சாதகமாக அமைந்தது. அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் ஜீவனாம்சம் கிடைத்தது. இந்தத் தீர்ப்பு ஷரியத் சட்டத்தை ஊடுருவிப் பார்க்கும் விதமாக இருந்தது. 

பொது சிவில் சட்டம் ஷரியத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. இதுவரை தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மட்டும்தான் பெண்களுக்குச் சொத்துக்களில் சம உரிமை என்கிற சட்டம், இந்துத் தனிநபர் சட்டத்தின்படி அமலில் உள்ளது. இதை, அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைபடுத்தவும், ஆண், பெண் பாகுபாட்டை ஒருவிதத்தில் குறைக்கவும் பொது சிவில் சட்டம் வழிவகை செய்கிறது.

இதோடு மட்டுமல்லாமல் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது சட்டப்படி விவாகரத்து செய்யாமல், இஸ்லாமிய மதத்துக்கு மாறி இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணம் செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தண்டனை கொண்டு வருவது, திருமணமான ஆண் - பெண் அல்லது திருமணமாகாதவர்கள் எந்தவித மதம் சார்ந்த சட்டத்தின் தலையீடும் இல்லாமல் குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற விதிகளும் அந்தச் சட்டத்தில் அடங்கும். ஆனால், இந்தச் சட்டத்தின் பெரும்பான்மை அம்சங்கள் சிறுபான்மை மக்களைத் தாக்கும் வகையில் இருப்பதால், தொடர்ந்து எதிர்ப்புக் கிளர்ந்தெழுந்தபடி இருக்கிறது.

ஒவ்வொரு முறை மத்தியில் அரசாங்கம் மாறும்போதும் பேசப்படும் சிவில் சட்டம் இந்த முறை கொண்டு வரப்படுமா?

‘‘மத்தியில் பி.ஜே.பி ஆட்சியில் அமரும்போதெல்லாம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்தும், காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ அகற்றுவது குறித்தும் தொடர்ந்து பேசப்படுகிறது. சென்ற முறை ஆட்சியிலும் இதனைச் செயல்படுத்த முயற்சி எடுத்தார்கள். 2014 - 2016 வரையிலான காலகட்டத்தில் மத்தியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, ‘முஸ்லிம்கள் சிறுபான்மையினரே இல்லை’ என்றார். மத்திய அரசு, வருடாந்திர இஃப்தார் விருதுகளை ரத்து செய்தது. 

அந்த வரிசையில்தான் பொது சிவில் சட்டத்தை இவர்கள் அமல்படுத்த நினைப்பதும் இருக்கிறது. இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம் பெண்களைப் பாதுகாக்கும் விதத்தில் இருப்பதில்லை என்பது இவர்களது வாதம். ஆனால், இஸ்லாமிய சட்டம் முழுமையாக, நம் நாட்டில் அமலில் இல்லை. பொது சிவில் சட்டத்தில் உரிமையியல் அடிப்படையில் இந்து, இஸ்லாமியர்கள் இருவருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான உரிமைகோரல் நிலைப்பாடுதான் சொல்லப்பட்டிருக்கிறது. தண்டனைச் சட்டத்தைப் பொறுத்தவரையில், இஸ்லாமியர்களின் ஷரியத் முக்கியப் பிரச்னையாக இருப்பதால், அதனை நீக்க வேண்டும் என்கிற பார்வை தவறு. தலாக் முறை பற்றிய மாற்றுக் கருத்து அவர்கள் சsமூகத்திலேயே இருக்கும்போது, அவர்களை ஒன்றுகூடிப் பேசவைத்து இதுதொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அரைகுறை மதவாதத்தைக் கடைப்பிடிக்கும் காங்கிரஸும் இதே தவற்றைத்தான் செய்ய முயன்றது. இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது நிச்சயம் 15 கோடி இஸ்லாமியர்கள் மனதில் வேற்றுமை உணர்வை ஏற்படுத்தும்” என்கிறார் எழுத்தாளர் அ.மார்க்ஸ்.

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறதா பொது சிவில் சட்டம்?

“எந்த ஒரு சட்டம் அமல்படுத்த இருக்கும் நிலையிலும் சட்ட கமிஷன் மக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கும். மக்களின் ஒப்புதலுடன் இது நடத்தப்படுகிறது என்பதற்கான ஆதாரம். ஆனால், உயர்மட்ட அளவில் அமைச்சர்கள் மட்டுமே சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள்.  பொது வாக்கெடுப்பு எடுக்கலாமே என்கிற கருத்து முன்வைக்கப்படும். ஆனால், இந்துக்கள் பெரும்பான்மை இருக்கும் நாட்டில் பொது வாக்கெடுப்பு அரசுக்குச் சாதகமாகத்தான் கிடைக்குமே தவிர, அது நியாயமான முறையில் இருக்காது. வேண்டுமென்றால், முஸ்லிம்களுக்கு மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தலாம். மேலும், இப்போது இருப்பதுபோல நேரு அமைச்சரவையில் இந்தச் சட்டம் குறித்து கருத்து முன்வைக்கப்பட்டபோது மதம் சார்ந்த பிரச்னைகள் இல்லை. அப்போதே நேருவும் அம்பேத்கரும் முடிவெடுத்து இந்தச் சட்டத்தை அமல்படுத்தியிருந்தால் எளிதாக நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். இப்போது மனதளவில் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.

“இன்னொரு புறம் இது பெண்களுக்காக இயற்றப்படும் சட்டம் என்கிறார்கள். ஆனால், இதனை அமல்படுத்துவதால் அவர்களுக்கு இன்னும் சிக்கல்தான் அதிகரிக்கும். 1985-ல் சாஹாபானு  விவகாரம் பேசப்பட்டபோது பானு மற்றும் அவரது நான்கு பிள்ளைகளுக்கான பராமரிப்புச் செலவாக அப்போதைய குற்றவியல் நடைமுறைப்படி நிர்ணயிக்கப்பட்டது 500 ரூபாய். அதுகூட நியாயமான தீர்ப்பு முறை கிடையாது. தற்போது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குச் சேரவேண்டும். அது சொத்தாக இல்லாத நிலையில், இஸ்லாமியர்களுக்கான வக்த் வாரியம் வழியாக அந்தப் பெண்களுக்கான முழுப் பணத்தைத் தர அவர்கள் முன்வர வேண்டும். 

பொது சிவில் சட்டமாக அமல்படுத்தப்பட்டால் இத்தனை சிக்கல்களையும் கடந்துதான் அந்தப் பெண்ணுக்கு உரிய பலன் சென்றடையும். தலாக் முறைக்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைக்கத்தான் இது கொண்டுவரப்படுவதாக இன்னொரு புறம் பேசப்படுது. ஆனால், 1956 வரை ஒருத்தருக்கு மூன்று மனைவிக்கு மேல் இருக்கலாம் என்பது இந்துக்களிடமே நடைமுறையில் இருந்த விஷயம்தான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒருவருக்கு பல வாரிசுகள் உருவாகும் சட்டச் சிக்கலைத் தீர்க்கதான் இந்துக்கள் திருமணச் சட்டத்தின்படி திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும், இஸ்லாமிய கணவன் - மனைவியர், ‘எனக்கு நீ... உனக்கு நான்’ என இறப்பின்வரை ஒன்றாக இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். தனிப்பட்ட ஒருவர் மூன்றாவது திருமணம் செய்துகொள்கிறார் என்பதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தையே மொத்தமாக மாற்ற முடிவெடுப்பது தவறு. பெண்களுக்கான சொத்துரிமைக்காகக் கொண்டுவரப்படுகிறது என்றால், இஸ்லாமிய சட்டமாக தனியாக இயற்றி அதனை நடைமுறைப்படுத்தலாம் அல்லது ஷரியத் இன்னும் இங்கு முழுக்க முழுக்க அமல்படுத்தப்படாத நிலையில் இஸ்லாமியர்களின் ஒத்துழைப்புடன் அதில் மாற்றம் கொண்டுவந்து அதனை இங்கே, நம் நாட்டில் நடைமுறைப்படுத்தலாம். 

பொது சிவில் சட்டம் கொண்டுவருவது அடுத்த சிறுபான்மையான கிறிஸ்தவர்களை அவ்வளவாக எந்த விதத்திலும் பாதிக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை. ஏற்கெனவே இந்துக்களுக்கான சட்டம் என அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும்போது இஸ்லாமியச் சட்டத்தை தனியாகக் கொண்டுவந்து நடைமுறைபடுத்துவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வு. இல்லையென்றால், பல அரசுகள் கடந்தும் இதே சிக்கல் தொடர்ந்துகொண்டிருக்கும்” என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயன்.

Monday, October 17, 2016

புண்ணியங்கள் நிறைந்த ஐப்பசி மாத ராசி பலன்கள்

ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமென்றும், ஐப்பசி மாதத்தில் நீசம் என்றும் சோதிட சாஸ்திரம் கூறுகின்றது. துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலா ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் நிறைந்தும் காணப்படும். இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசியில் உலகில் உள்ள அனைத்து புண்ணீய தீர்த்தங்களும் காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும்.

புண்ணியங்கள் நிறைந்த ஐப்பசி மாத ராசி பலன்கள்
புண்ணியங்கள் நிறைந்த ஐப்பசி மாத ராசி பலன்கள்
ஐப்பசி மாதம் சிறப்பு மிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் தீபாவளிப் பண்டிகை, கேதாரகௌரி விரதம், கந்த சஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பல்வேறு சிறப்புகள் நிறைந்த ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்திற்கான 12 ராசிகாரர்களுக்கு உரிய பலன்களை அறிந்து கொள்வோம்.

மேஷம் : 

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் காரணமாக அடிக்கடி பயணம் செய்யும் நிலை உண்டாகும் அதிகாரிகளுடன் நல்லுறவு நிலவும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயத்தில் கவனம் தேவை விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை குல தெய்வ வழிபாடு யோகத்தை கொடுக்கும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும் உடல் உழைப்பு அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும்

ரிஷபம் : 

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் தொழில் உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருக்கவும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் கவனம் தேவை பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும் வாகனங்களை கையாளும் பொழுது கவனமாக இருக்கவும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும்

மிதுனம்:

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலை சம்பந்தமான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் அரசு முறை பயணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் வாகனங்களை கையாளும்பொழுது கவனமாக செயல்படவும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வி நிலை சிறப்படையும் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துகளை வாங்குவீர்கள் வாகன யோகம் உண்டாகும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். 

கடகம்: 

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும் அரசு ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் ஷேர்மார்க்கெட் தொழில் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாருடன் நல்லுறவு உண்டாகும் புத்தி கூர்மை அதிகரிக்கும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் பூர்வீக சொத்திலிருந்து பண வரவு உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கடுமையை குறைத்துக் கொள்ளவும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும். 

சிம்மம்: 

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் பக்கத்து ஊருக்கு பயணம் செய்யும் நிலை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் படிப்பில் கவனம் அதிகரிக்கும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் செல்வச்சேர்க்கை உண்டாகும் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கல் வாங்குவீர்கள் உல்லாசப் பயணம் செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் செழிப்படையும் புது வாகனம் வாகனம் வாங்குவீர்கள் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக் குழப்பம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும். 

கன்னி: 

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் முருகன் வழிபாடு நன்மையை உண்டாக்கும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் நல்ல சுப மங்கல தகவல் வந்து சேரும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மனதில் நிம்மதி பிறக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் நல்லுறவு உண்டாகும் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்வீர்கள் காதில் நோய் உண்டாகலாம் கவனம் தேவை ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் உறுதி உண்டாகும். 

துலாம் : 

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு உண்டாகும் தலையில் நோய் உண்டாகலாம் கவனமாக இருக்கவும் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும் புதிதாக வீடு வாங்கும் நிலை உண்டாகும் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள் வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் அடிக்கடி வெளியூர் செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் பேச்சில் கடுமையை குறைத்துக் கொள்ளவும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். 

விருச்சிகம் :

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பணியிடமாற்றம் உண்டாகும் அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் செல்வச்சேர்க்கை அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும் தொழில் நிலை சிறப்படையும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். 

தனுசு : 

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பவை எல்லாம் நிறைவேறும் முயற்சிகள் வெற்றியடையும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் பண வருமானம் அதிகரிக்கும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும் ஊக வணிக முதலீடுகளில் கவனம் தேவை உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும் செயல்கள் சிறப்படையும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்படையும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் வீண் அலைச்சல் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக நிலத்திலிருந்து பண வரவு உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும். 

மகரம் :

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் பரம்பரை தொழில் சிறப்படையும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிற்சாலைக்கு புதிய கருவிகளை வாங்குவீர்கள் புதிதாக நிலம் வாங்கும் யோகம் உண்டாகும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மைநிலை உண்டாகும் ஷேர்மார்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பயணம் செல்வீர்கள் தான தர்மங்கள் செய்வீர்கள் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் உண்டாகும் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும்.

கும்பம்:

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் அனுகூலமாக இருக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும் புதிதாக வீடுகட்டும் பணி துவங்கும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் கல்வி துறை சார்ந்தவர்களுக்கு தொழில் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும் எதிர்பாராமல் பணவரவு உண்டாகும் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் லாபம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும் தொழிலிருந்த தடைகள் நீங்கும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் மனநிலை தெளிவாகும். 

மீனம் :

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் கவனம் தேவை தந்தை வர்க்கத்தாருடன் சச்சரவு வேண்டாம் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் தொழில் லாபம் அதிகரிக்கும் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் தாய் மாமனுடன் மனஸ்தாபம் உண்டாகலாம் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் தொழில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும்.

Friday, October 14, 2016

தமிழ்த்தாய் ஈன்ற இளைஞர்களின் எழுச்சி நாயகன் A.P.J. அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள் இன்று

பல நல்ல மாமனிதர்களை பெற்று பெருமை கொண்டது தான் நம் தேசம் அந்த வகையில் தமிழ்த்தாய் ஈன்ற கடைகோடியில் பிறந்த காவியத்தலைவன் தான் A.P.J.அப்துல் கலாம் அவரின் பிறந்த நாள் இன்று.

உலக நாயகனின் உதயம் :

தமிழ்நாட்டின் கடைகோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் சாதரணமான ஏழை மீனவக் குடும்பத்தில் ஜெயினுலாப்தின் - ஆஷியம்மா தம்பதியருக்கு 15.10.1931-ல் பிறந்தவர் தான் அப்துல் கலாம். கலாமின் 86-வது பிறந்த தினம் இந்நாள். அவரின் முழுப் பெயரோ "ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன்  அப்துல் கலாம்"  சிறு வயது முதலே பல  கஸ்டங்களை கடந்து வந்தவர் தான் கலாம். பேப்பர் போடும் பையனாக இருந்து தன் வாழ்க்கைப் பயணங்களை தொடங்கியுள்ளார்.

தமிழ்த்தாய் ஈன்ற கடைகோடியில் பிறந்த காவியத்தலைவன் தான் A.P.J.அப்துல் கலாம் பிறந்த நாள்
தமிழ்த்தாய் ஈன்ற கடைகோடியில் பிறந்த காவியத்தலைவன் தான் A.P.J.அப்துல் கலாம் பிறந்த நாள்
கலாமின் கல்விப் பருவம் : 

இராமநாதபுரம் ஸ்வாட்ஸ் மெட்ரிக் பள்ளியில் படித்தார்.பின் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியலும் ,1955-ல் சென்னை எம்.ஐ.டி யில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்கும்  பயின்றார்.

இந்தியாவின் குடிமகனாக விளங்கிய கலாம் : 

இப்படி தன்னுடைய வாழ்க்கையைத்  தொடங்கிய கலாம் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தார். 1958-ல் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்த கலாம் 1963-ல் இந்திய விண்வெளித் துறையின் திட்ட அலுவலர் ஆனார். 1998ல் ராஜஸ்தானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை எல்லாம் அதிர வைத்தார்.

அக்னி நாயகனாய் கலாம் :

1960-ல் DRDO விஞ்ஞானியாக தன் பயணத்தை தொடங்கிய கலாம் பிறகு இஸ்ரோ விண்வெளித் துறையில் கால்பதித்து பல ஏவுகணைகளை பறக்க விட்டார்.உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர இவரின் பணி இன்றியமையாதது.  இந்திய விண்வெளித் துறைக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கனார். அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்தி உலக நாடுகள் அனைத்தையும்  இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த இவர் "ஏவுகணை தந்தை என்றே" அழைக்கப் பட்டார் .பல தொழில் நுட்பத்துக்கு வித்திட்டவராய் திகழ்ந்தவர் கலாம்.

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள் இன்று
இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள் இன்று 
இளைஞர்களின் எழுச்சி நாயகனாய் கலாம் : 

இந்திய விண்வெளித் துறையோடு தன் பயணத்தை முடிக்காமல் எதிர்கால இந்தியாவின் மன்னர்களாம் இளைஞர்களை "கனவு காணுங்கள்   கனவு காணுங்கள்" எனக் கூறி ஒவ்வொரு இந்திய இளைஞரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தவர். ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் இமயமாக இருக்கிறார்.

நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த கலாம் :

பாரத ரத்னா, பத்ம பூசண், பத்ம விபூசண் என எந்த பட்டத்தையும் விட்டுவைக்காத கலாம் நாட்டின் குடியரசு தலைவராகவும்  உயர்ந்தார்.   இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002-2006 வரை பணியாற்றினார் . எத்தனையோ பேரை இப்பதவி அலங்கரித்தது ஆனால் இந்த பதவியே அலங்கரிக்கப்பட்டது அப்துல் கலாமால்.நாட்டின் தலைவராக உயர்ந்த போதிலும் தனக்கென எதுவும் சேர்த்து வைக்காமல் நாட்டுக்காகவே வாழ்ந்தார். அவர் சேர்த்து வைத்தது என்னவோ அவரின் புத்தகங்களும்,நம்முடைய அன்பையும்.

கலாமின் நூல்கள் :

இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பதே கலாமின் ஆசையாக இருந்தது அதனால் "இந்தியா 2020" என்ற நூலை எழுதினார். அவரின் வாழ்க்கை காவியமான "அக்னி சிறகுகள்",குறிக்கோள் 3 பில்லியன்,திருப்பு முனைகள், பற்றவைக்கப்பட்ட மனங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

கனவாக மாறிய கலாம் : 

கனவு காணுங்கள் எனக்கூறி கலங்கரை விளக்காய் திகழ்ந்த கலாம் தன்னுடைய விந்தை விளையாட்டை மண்ணுலகில் மட்டும் செய்தால் மட்டும் போதாது விண்ணிலகிலும் செய்ய வேண்டும் என விரைந்து விட்டார்.கடவுளுக்கே கலாமை சீக்கிரமாக காண வேண்டும் என்ற ஆசை போலும் அதனால் விரைவாக அவர் கலாமை அழைத்துச் சென்றுவிட்டார். 27.07.2015 அன்று மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த கலாம் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் இறந்தார்.அவரின் மரணம் இந்தியாவையே சோகத்தில் மூழ்க்கியது ஒவ்வொரு இந்தியனும் தன் குடும்பத்தில் ஒருவராக கலாமுக்காக துக்கம் செய்தார்கள்.அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரம்  பேக்கரும்பில்   அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தற்போது அவரின் சமாதியில் பிரமாண்டமான வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இன்று கலாம் நம்மிடம் இல்லை என்றாலும் அவர் விதைத்த விதைகளாய் இருக்கிற இளைஞர்கள் ஒவ்வொருவரும் இந்தியா வளர்ந்த வல்லரசு நாடாக மாற  உழைக்க வேண்டும்  உழைப்போம்.

கலாமின் முக்கிய கோரிக்கைகள் :

1.கிராமம் - நகரம் இடையே இடைவெளி அனைத்தும் அகலப் பட வேண்டும்.
2.குடிநீர்,எரிசக்தி சமனடையப் பட வேண்டும்.
3.விவசாயம்,தொழில் ,சேவை, ஒருங்கிணைந்த முன்னேற்றம்.
4.சமூகம் ,பொருளாதாரம், பண்பாட்டுடன் சிறந்த கல்வி அனைவருக்கும் கிடைத்தல்.
5.விஞ்ஞானம் ,அறிவார்ந்த வல்லமை ,தொழில் முதலீடு ஏற்புடைய நாடாக மாற்ற வேண்டும்.
6.குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி.
7.ஊழலற்ற ,வெளிப்படையான, பொறுப்பான ஆட்சி முறை.
8.எவரும் தனிமைப் படுத்தப்படாமல் வறுமை ஒழிக்கப்பட்டு கல்லாமை இன்றி, பெண்கள், குழந்தைகள் பேணப்படுதல் .
9.அனைத்து வகைகளிலும், ஓர் ஏகோபித்த நாடாக இந்தியா மாற வேண்டும்.
10.சிறந்த தலைமை, வளமான, அருமையான நிலையை இந்திய மக்கள் அனுபவிக்க வேண்டும்.

கலாம் கற்பித்த பொன் மொழிகள் :

சிறந்த மனிதர்களுக்கு மதம் என்பது, நண்பர்களை உருவாக்கும் வழி சிறிய மனிதர்களுக்கு அது சண்டையிடுவதற்கான கருவி.

உங்களது முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வு எடுக்காதீர்கள். ஏனென்றால் இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல நிறைய உதடுகள் காத்துக் கொண்டிருக்கும்.

வானத்தைப் பாருங்கள் நாம் தனித்து இல்லை.இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது.
கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.

பெரிய விசயங்களுக்காக காத்திருக்க கூடாது.கையில் என்ன இருக்கிறதோ அதைக்கொண்டு பயணத்தை தொடங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. புதிய ரே‌ஷன்கார்டு ‘ஸ்மார்ட்கார்டு’ அளவில் வழங்கப்பட உள்ளது.

இதனால் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 2017 ஜனவரி முதல் புதிய ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் வழங்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்க ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி தொடங்குகியது

ரே‌ஷன் கடைகளில் நவீன விற்பனை எந்திரம் (பாயிண்டஸ் ஆப் சேல்) அமைக்கப்பட்டு அதில் குடும்ப அட்டைதாரர்களின் முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் விவரம், செல்போன் எண், சிலிண்டர் எண்ணிக்கை போன்றவற்றோடு ஆதார் எண்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.

குடும்ப அட்டை எண் முதல் அனைத்து விவரங்களும் அந்த கருவி மூலமாக கடை ஊழியர் பதிவு செய்வார். ஆதார் அட்டையை அக்கருவி ஸ்கேன் செய்து கொள்ளும்.

இந்த பணி இதுவரையில் 13 மாவட்டங்களில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான அளவில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் 23 ரே‌ஷன் கடைகளில் மட்டும் பரீட்சார்ந்த முறையில் தொடங்கப்பட்டது.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் குடும்ப அட்டை தகவல்கள் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. தென் சென்னையில் 6-ந்தேதியும், வட சென்னையில் 7-ந்தேதியும் தொடங்குகிறது. 2 ஆயிரம் ரே‌ஷன் கடைகளில் நவீன கருவி மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைகளின் விவரமும் பதிவு செய்யப்படும்.

இந்த பணி தொடங்குவதற்கு முன்பாக நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது மக்களிடம் இருந்து ரே‌ஷன் கார்டு விவரங் களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கள் ஆலோசனை வழங்கு கின்றனர்.

இந்த பணி 2 மாதம் வரையும் நடைபெறும். நவம்பர் 1-ந்தேதி ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணி தொடங்கும். டிசம்பர் மாதம் ஸ்மார்ட் கார்டுகள் தயாராகிவிடும். ஜனவரியில் இருந்து பயன்படுத்த கூடிய வகையில் பழைய கார்டுகளை பெற்றுக் கொண்டு புதிய கார்டு வழங்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் நவீன கருவி மூலம் ஆதார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் செப்டம்பர் 6-ந்தேதி இந்த பணி தொடங்குகிறது. வழங்கல் பதிவேட்டில் உள்ள குடும்ப அட்டை விவரங்களை ரே‌ஷன் கடை ஊழியர் இந்த கருவியில் முதலில் பதிவு செய்துவிடுவார்.

அதன் பின்னர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் போது குடும்ப தலைவரிடம் சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கேட்டு பதிவு செய்யப்படும்.

அடுத்த முறை கடைக்கு வரும் போது ஆதார் அட்டை கொண்டு வந்து பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்படும். ஒவ்வொரு ரே‌ஷன் கடையிலும் தினமும் 100 முதல் 200 குடும்ப அட்டைகள் விவரம் பதிவு செய்யப்படும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை இருந்தாலும் பதிவு செய்யலாம். ஒரு மாதம் இந்த பணி நடைபெறும். அதன்பிறகும் பதிவு செய்யாதவர்களுக்கு கடைசி வாய்ப்பும் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது ‘பில்’ வழங்கப்படாது. அந்த கார்டை கருவியில் காட்டினால் போதும் அவர்களுக்கு உரிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

பொருட்கள் வழங்குவது குறித்த தகவல் உடனடியாக குடும்ப தலைவர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். செல்போனில் வந்த தகவலை காண்பித்து தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு இல்லை.

தமிழக அரசு பொது விநியோக திட்டத்தினை காகிதமில்லா நிர்வாகமாக மாற்றி விநியோகத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பொது விநியோக திட்டத்தில் அதிக வெளிப்படைதன்மை, துரித சேவை, அத்தியாவசிய பொருட்களின் எடை மற்றும் செலுத்தப்பட்ட தொகை குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், கடை திறப்பு மற்றும் இருப்பில் உள்ள பொருட்களின் அளவு ஆகியவை அறிந்து கொள்ள மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் இணையதள சேவை மூலம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற இயலும்.

அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விற்பனை எந்திரத்தில் 100 சதவீத குடும்ப அட்டைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது மறுக்கப்படமாட்டாது.

இருப்பினும் ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் தாங்களாக முன்வந்து நியாய விலைக்கடையில் உள்ள விற்பனையாளரிடம் விற்பனை எந்திரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரத்தை பதிவேற்றம் செய்து இத்திட்டம் சிறப்பாகம், வெளிப்படையாகவும் நடைமுறைப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.