Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Wednesday, November 30, 2016

மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன? நீங்கள் அறியவேண்டிய 10 விஷயங்கள்?

அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாள் முதலே, சிரமத்தில் இருந்த பலருக்கும் கைகொடுத்தது இணையவழி பணப்பரிமாற்றங்கள்தான். இந்த மின்னணு பரிமாற்றங்களை நோக்கி அதிகம் முன்னேறவும், தற்போது அரசு நம்மை அறிவுறுத்தி வருகிறது.

மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
மத்தியில் அரசின் இணையவழி யு.பி.ஐ பணப்பரிமாற்றம் என்றால் என்ன?
இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், இ-வாலட்கள் என பலவழிகள் மின்னணுப் பரிமாற்றங்களுக்கு உதவிவருகிறது. பல இ-வாலட்கள் நாம் மொபைலில் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் அவை அனைத்தும் தனியார் சேவைகள். இந்நிலையில் பெரும்பாலோனோர் மத்தியில் அரசு சேவையான யு.பி.ஐ பணப்பரிமாற்றம் பற்றிய ஆர்வம் வந்துள்ளது. எனவே அதுபற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

1. மத்திய அரசின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் சேவைதான் இந்த யு.பி.ஐ. ஒரு ஸ்மார்ட்போன், ஒரு ஆண்ட்ராய்டு ஆப், உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை வைத்துக் கொண்டே இதில் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

2. இந்த சேவையை பயன்படுத்த ஏதேனும் ஒரு வங்கியின் யு.பி.ஐ ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் சரி..மற்றொரு வங்கியின் ஆப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

3. இதன் மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்ப அவரது வங்கி கணக்கு எண், IFSC கோட் என எதுவுமே வேண்டாம். நீங்களும் கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு எண், ஆன்லைன் பேங்கிங் விவரங்கள் போன்ற எதையும் கொடுக்க வேண்டாம்.

4. இதன் மூலம் உடனடியாக ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை அனுப்ப முடியும். நாம் பணம் அனுப்புவதைப் போலவே நீங்கள் மற்றொருவரிடம் இருந்து உடனடியாக நம்மால் பணம் பெறவும்  முடியும்.

5. இதனை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பார்ப்போம். முதலில் ஏதேனும் ஒரு வங்கியின் ஆப்பை இன்ஸ்டால் செய்து அதில் உங்கள் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஆப்பை திறந்ததுமே, ஆப் உங்களின் அனுமதியைக் கேட்டுவிட்டு எஸ்.எம்.எஸ் மூலமாக உங்கள் போன் எண்ணை உறுதி செய்துகொள்ளும். அதேபோல ஆப்பை பயன்படுத்த பாஸ்வேர்டையும் செட் செய்துகொள்ள வேண்டும்.

6. பிறகு ஆப் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை இதில் இணைத்துக் கொள்ளும். உங்களது போன் எண் ஆனது எந்த வங்கிகளில் எல்லாம் இணைக்கப்பட்டு உள்ளதோ, அந்தக் கணக்குகளை மட்டுமே இது எடுத்துக்கொள்ளும்.

7. கணக்கு விவரங்களை இணைத்தபிறகு விர்ச்சுவல் ஐடி எனப்படும் தனிப்பட்ட ஐடி.,யை உருவாக்கிக் கொள்ளவேண்டும். விர்ச்சுவல் ஐடி எனப்படும் இந்த முகவரிதான் பணம் அனுப்பவும், பெறவும் பயன்படும் முகவரி. இவற்றுடன் வங்கி மூலம் பெறப்பட்ட எம்.பின்னையும்(M-Pin) பதிவு செய்துவிட்டால், உங்கள் யு.பி.ஐ ஆப் பணம் அனுப்பவும், வாங்கவும் தயாராகிவிடும். இந்த ஆப்பில் உங்கள் ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம். இதன் உதவியுடன் ஆதார் எண் மூலமும் பணம் அனுப்ப முடியும்.

8. அதேபோல பிறரிடம் இருந்து பணம் பெற, பணம் பெற வேண்டியவரின் விர்ச்சுவல் முகவரியைக் கொடுத்து, எவ்வளவு பணம் பெற வேண்டும் என்பதனை கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த பணப் பரிவர்த்தனைக்கு ஒருநாள், ஒருவாரம் என நேர அளவும் செட் செய்துகொள்ள முடியும். நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்த உடனேயே, இந்த கோரிக்கை, நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்தவரின் மொபைலுக்கு சென்று விடும். உடனே அவர் தனது எம்-பின்னை கொடுப்பதன் மூலமாக பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். உடனே உங்கள் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் நிர்ணயித்துள்ள கால அளவுக்குள் அதனை செய்தால் போதும். விர்ச்சுவல் முகவரி தவிர வேறு எதையும் நாம் பகிர்ந்துகொள்வது இல்லை என்பதால் பாதுகாப்பானது.

யு.பி.ஐ பணப்பரிமாற்றம் - நீங்கள் அறியவேண்டிய 10 விஷயங்கள்
9. இதன்மூலம் கடைக்காரர்கள் கூட, தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்திற்கு பதிலாக, இதில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். ஷாப்பிங் செய்யும் போது கேஷ் ஆன் டெலிவரி போன்றவற்றிலும் இது பயன்படும்.

10. தற்போது இதில் இருக்கும் பெரிய பிரச்னையே, இதில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகள்தான். ப்ளே ஸ்டோரில் இருக்கும் எந்தவொரு யு.பி.ஐ App-ம் நல்ல ரிவ்யூக்களை பெறவில்லை. இதனை பிராக்டிக்கலாக பயன்படுத்தும் போதும், நிறைய சிக்கல்கள் வருகின்றன. டூயல் சிம் போன்களில் போன் எண்ணை உறுதி செய்வது, வங்கி கணக்குகளை இதில் இணைப்பது போன்றவற்றில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை விரைவாக சரிசெய்தால் மட்டுமே இதன் பயன் அனைவரையும் சென்றடையும். அதேபோல இதில் நிறையப்பேர் இணைந்தால் மட்டுமே இது வெற்றிகரமான முறையாகவும் அமையும்.

Monday, November 28, 2016

திருமண பொருத்தம் என்றால் என்ன? ஏன் 10 பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும்?

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம். 

திருமண பொருத்தம் என்றால் என்ன?
திருமண பொருத்தம் என்றால் என்ன?
நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள். அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

இனி, திருமண பொருத்தம் என்றால் என்ன மற்றும் அதன் உண்மை விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்.

தினப் பொருத்தம்:

தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

கணப் பொருத்தம்:

குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

மகேந்திரப் பொருத்தம்:

திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

யோனிப் பொருத்தம்:

யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.

ராசிப் பொருத்தம்:

பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் இந்த பொருத்தம் முக்கியம்.

ராசி அதிபதிப் பொருத்தம்:

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.

வசியப் பொருத்தம்:

கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது.

ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்:

இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

வேதைப் பொருத்தம்:

திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப - துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.

அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்

Saturday, November 26, 2016

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை நோட்டை எங்கெல்லாம் மாற்றலாம்?

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த பட்டியல் இதோ.

டிசம்பர் 15ம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டை சில சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் சலுகை அளித்துள்ளது. அப்படி சலுகை அளிக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்த விவரம்

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை நோட்டை எங்கெல்லாம் மாற்றலாம்
பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை நோட்டை எங்கெல்லாம் மாற்றலாம்
1. டோல் கேட்டுகள் மற்றும் பெட்ரோல் பங்குகள்.

2. மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். 

3. ரூ. 500 வரைக்கும் செல்போன்களில் டாப்அப் செய்து கொள்ள பயன்படுத்தலாம். 

4. நுகர்வோர் கூட்டுறவுக் கடைகளில் உரிய அடையாள அட்டைகளைக் காட்டி ரூ. 5000 வரை பொருட்களை வாங்கும்போது  இந்த பழைய நோட்டுக்களைப் பயன்படுத்தலாம். 

5. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பால் பூத்துகளில் பால் வாங்க பயன்படுத்தலாம். 

6. குடிநீர், மின்சாரக் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தலாம். 

7. அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களில் பயன்படுத்தலாம். 

8. மருத்தவர்களின் சீட்டுடன் அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்து வாங்க பயன்படுத்தலாம் 

9. ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள்.

10. விமான நிலையங்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம். 

11. மயானங்கள் இடுகாடுகளில் பயன்படுத்தலாம். 

12. காஸ் சிலிண்டர்களை வாங்கப் பயன்படுத்தலாம். 

13. ரயில்களில் உள்ள உணவகங்களில் பயன்படுத்தலாம். 

14. புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம். 

15. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் நினைவிடங்களில் கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம் (மாமல்லபுரம் போல) 

16. மத்திய அரசு, மாநில அரசுகள் விதிக்கும் கட்டணங்கள், வரிகள், அபராதங்கள் உள்ளிட்டவற்றைக் கட்ட பயன்படுத்தலாம். 

17. கோர்ட் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம். 

18. அரசு நிறுவனங்கள் நடத்தும் விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க பயன்படுத்தலாம்.

19. அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கவுண்டர்களில் டிக்கெட் வாங்கப் பயன்படுத்தலாம். 

20. மத்திய, மாநில அரசு, நகராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில ரூ. 2000 வரை கல்விக் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தலாம். 

பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா
பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா

பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆயிரம் ரூபாய் நோட்டு இனி எந்தவொரு பரிவர்த்தனைக்கும் செல்லாது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 21 இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பழைய 1000 ரூபாய் நோட்டுகளை இனி வங்கிகளைத் தவிர எங்கும் மாற்ற முடியாது என்ற சூழல் உள்ள நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் மாற்றலாம் என்று உங்களுக்குத் தெரியுமா..?

இதோ உங்களுக்கான பழைய 500 ரூபாய் நோட்டுகளை எங்கெல்லாம் செல்லும் என்பதற்கான பட்டியல்.

மருத்துவமனை:
அரசு மருத்துவமனை, அரசு மருந்தகங்கள் போன்ற இடங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் செல்லும் போது பழைய 500 ரூபாய் செல்லும்.

மருந்தகங்கள்:
மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை சீட்டு மற்றும் அவர்கள் வழங்கும் ஐடி படிவத்தைக் காண்பித்து பழைய 500 ரூபாய்களை மாற்றிக்கொள்ளலாம்.

டிக்கெட் கவுண்டர்கள்:
ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், அரசு மற்றும் மாநில அரசு போக்குவரத்து கழகங்களின் டிக்கெட் கவுண்டர்கள் ஆகிய இடங்களில் பழைய 500 ரூபாய் செல்லும்.

பால் பூத்துகள்:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பால் பூத்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலும்.

எரிசக்தி நிலையங்கள்:
அரசு நிறுவனங்கள் நடத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

சுடுகாடு:
அரசு இயக்கி வரும் சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு 500 ரூபாய் செல்லும்.

விமான நிலையங்கள்:
வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு வரும் மற்றும் செல்லும் பயணிகளுக்கு 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

சுற்றுலாப் பயணிகள்:
வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் 5000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

கூட்டுறவு கடைகள்:
கூட்டுறவு கடைகளில் நுகர்பொருள் வாங்கும் போது பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

சமையல் எரிவாயு:
சமையல் எரிவாயு வாங்கும் போது பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

ரயில் பயணம்:
ரயில் பயணங்களில் உணவுப் பொருட்கள் வாங்கும் போது பழைய 500 ரூபாய் செல்லும்.

புறநகர் ரயில் சேவை:
புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட் கவுண்டர்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும்.

அருங்காட்சியகம்:
இந்திய தொல்பொருள் கழகம் இயக்கி வரும் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பெறப்படும்.

அரசு நிறுவனங்கள்:
மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரி, அபராதம் போன்றவற்றிற்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

பயன்பாடுகள்:
மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்தும் போது பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும். ஆனால் இது நடப்பு பில்கள் மற்றும் பழைய பில்களுக்கு மட்டுமே. முன்பணமாக்கச் செலுத்த இயலாது.

நீதி மன்றம்:
நீதி மன்றங்களில் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

விதைகள்:
நியமிக்கப்பட்ட மையங்களில் இருந்து விதைகள் வாங்கப் பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

பள்ளி கட்டணம்:
மத்திய, மாநில, நகராட்சி மற்றும் உள்ளூர் பள்ளி கட்டணங்கள் செலுத்த 2000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

கல்லூரிகள்:
மத்திய மற்றும் மாநில அரசு கல்லூரிகள் கட்டணம் போன்றவற்றுக்கு பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும்.

மொபைல் ரீசர்ஜ்:
பீரிபெய்டு மொபைல் சிம் கார்டுகளின் டாப் அப் ரீசார்ஜ்கள் ரூ.500 செய்யும் போது செல்லும்.

கூட்டுறவு ஸ்டோர்கள்:
நுகர்பொருள் கூட்டுறவு ஸ்டோர்களில் 5,000 ரூபாய் வரை பழைய 500 ரூபாய்களை வழங்கி பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Friday, November 25, 2016

கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்?

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள் :

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும். 

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் 12 அறிகுறிகள்

இந்த அறிகுறிகள் எல்லாம் அனுபவமிக்க பல பெண்கள் கூறியவை. மேலும் இந்த அறிகுறிகளைக் கொண்டு கணித்தப்படியே பல பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இங்கு ஒரு பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

அறிகுறி #1:

கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே, அவர்களின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என அறியலாம். அதில் கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #2:

 கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இருக்கும். அதில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை. அதுவே ஒருவித மேகமூட்டமான வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #3:

கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் மற்றும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அதில் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #4:

கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப மார்பகங்கள் பெரிதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இடது மார்பகங்கள் தான் பெரிதாகும். ஆனால் ஆண் குழந்தையைச் சுமக்கும் பெண்களுக்கு இடது மார்பகத்தை விட, வலது மார்பகம் பெரிதாகும்

அறிகுறி #5:

கர்ப்ப காலத்தில் பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்

அறிகுறி #6:

கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர்கள் குழந்தையின் இதயத் துடிப்பையும் அளவிடுவார்கள். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தித்திகு 140 முறை துடித்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

அறிகுறி #7:

வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்த்ல், கர்ப்ப காலத்தில் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதுவும் சாதாரண நிலையை விட சற்று அதிகமாகவே முடியின் வளர்ச்சி இருக்கும்

கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை
கர்ப்பிணிகளின் பெண்களின் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை
அறிகுறி #8:

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கர்ப்பிணிகளுககு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம்

அறிகுறி #9:

கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். இந்நிலையில் தூங்கும் போது, எப்போதும் இடது பக்கமாக தூங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்

அறிகுறி #10:

ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கைகளில் வறட்சிகள் மற்றும் வெடிப்புக்கள் அதிகம் வரும்.

அறிகுறி #11:

பொதுவாக கர்ப்ப காலத்தில் காலை வேளையில் பெண்கள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் இம்மாதிரியான அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

அறிகுறி #12:

கர்ப்ப காலத்தில் வயிறு வட்டமாகவும், வயிறு மட்டும் பெரியதாகவும் இருக்கும். இப்படி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

Wednesday, November 9, 2016

பொது மக்கள் வசதிக்காக வருகின்ற சனி, ஞாயிறு வங்கிகள் செயல்படும் & வங்கி உதவி மையம் திறப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வருகின்ற சனி, ஞாயிறு வங்கிகள் வழக்கம் போல செயல்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு : 

ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். மேலும், இருப்பு வைத்துள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார். 
ஆனால், இன்று வங்கிகள் விடுமுறை. ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்காததால் அத்யாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2-வது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 2-வது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

2000 ரூபாய் நோட்டு விநியோகம்: வாங்க மக்கள் ஆர்வம் : 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வாங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  ரூ 2,000 நோட்டை ஆர்வத்துடன்  வாங்கிச் செல்கின்றனர்.

2000 ரூபாய் நோட்டு விநியோகம்: வாங்க மக்கள் ஆர்வம்

வங்கிகளில் பழைய ரூ.500, ரூ 1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய 500, 1000 நோட்டுகளை கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மொத்தம் 8 கவுண்டர்களில் திறக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ரிசர்வ் வங்கியில் மாலை நான்கு மணி வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். 

சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அந்தந்த வங்கிக் கணக்கு உள்ளவர்கள் இன்று மாலை 4 மணி வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி 2000 ரூபாய் புதிய நோட்டுகளை பெறலாம். இதற்கென அனைத்து வங்கிகளிலும் விண்ணப்பங்கள் கொடுப்பட்டு வருகின்றன. அந்தந்த குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் மதியத்திற்கு மேல் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம் என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. காலையிலிருந்து மக்கள் கூட்டம் வங்கிகளில் அலைமோதி வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறப்பு : 

பொது மக்கள் வசதிக்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் 044- 2538 1390 அல்லது 2538 1392 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் குவிந்த மக்கள் :

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் திரண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும், 4000 ரூபாய் வரை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்களிலும் இதுபோன்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதேசமயம் நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர்.  ஏ.டி.எம். மையங்களிலும் நாளைதான் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நாடு முழுவதும் இன்று வங்கி திறக்கப்பட்ட நிலையில், பணத்தை மாற்றுவதற்காகவும், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுச் செல்கின்றனர்.

பல்வேறு பகுதிகளில் 500 ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை என்பதால் புதிய 2000 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுகின்றன. 

இதற்காக வங்கிகளில் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதனை பூர்த்தி செய்து கொடுத்து பணம் பெற்றுச்செல்கின்றனர். 

தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பணம் மாற்றுவதற்காக மக்கள் குவிந்துள்ளனர். இதனால் பல்வேறு வங்கிகளின் முன்பு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tuesday, November 8, 2016

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு மாற்ற முடியும்? நீங்களே வங்கிக்கு போக வேண்டுமா? : ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்:

ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இவை. 

சென்னை: கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இனி உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது என யோசிக்கிறீர்களா? அல்லது மாற்றுவதற்கு வங்கிக்கு செல்லப் போகிறீர்களா? 

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது?
ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்: 

  • கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


  • மத்திய அரசின் அறிவிப்பால் இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாதவையாகிவிட்டன. அதே நேரத்தில் உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான பணத்தை புதிய ரூ 500, ரூ 2,000 மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். 


  • உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


  • உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.


  • உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். 


  • ரூ4,000க்கு மேல் உங்களுக்கு தேவை இருப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றி செக் அல்லது நெட்பேங்கிங் அல்லது கிரெடிட்டெபிட் கார்டுகள் மூலம் பயன்படுத்தலாம்.


  •  உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையெனில் உரிய ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கணக்கை தொடங்கலாம்.


  •  ரூ4,000 வரை பணத்தை மாற்றுவதற்கு நீங்கள் நேரடியாக உரிய அடையாள அட்டையுடன் வங்கிக்கு நேரடியாக செல்லலாம். எந்த ஒரு வங்கியின் கிளைக்கும் சென்று நீங்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.


  •  நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலையில் எழுத்துப்பூர்வமான அத்தாட்சி கடிதத்தை உரிய அடையாள அட்டைகளுடன் கொடுத்தனுப்பியும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். நீங்களே நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். 


  • ஏடிஎம்கள் இன்று இயங்காது. ஏடிஎம்கள் செயல்பட தொடங்கும் நிலையில் நவம்பர் 18-ந் தேதி வரை உங்களால் அதிகபட்சமாக ரூ2,000 மட்டுமே எடுக்க முடியும். 


  • நவம்பர் 19-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ரூ4,000 வரை ஒருநாளுக்கு அதிகபட்சமாக எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை நீங்கள் அதிகபட்சமாக ஒருநாளைக்கு ரூ10,000 வரை மட்டுமே எடுக்க முடியும். 


  • வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ20,000 வரை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். நவம்பர் 24-ந் தேதிக்கு பின்னரே இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும்.


  • ஏடிஎம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ500, ரூ1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும். ரூ500, ரூ1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். வர்த்தக ரீதியாக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகியற்றில் டிசம்பர் 30-ந் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். 


  • டிசம்பர் 30-ந் தேதிக்குள் உங்களால் தவிர்க்க இயலாத காரணங்களால் மாற்ற முடியாமல் போனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களை காண்பித்து மார்ச் 31-ந் தேதி வரையும் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற முடியும்.


  • நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அத்தாட்சி கடிதம் ஒன்றை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ அலுவலக பணியாளர்களிடமோ கொடுத்து பணத்தை மாற்ற முடியும். 


  • நீங்கள் சுற்றுலா பயணியாக இருந்தால் விமான நிலையங்களில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்ற முடியும். அரசு மருத்துவமனைகளில் கட்டண்ம செலுத்தவும், அரசு பேருந்து டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றை பெறவும் நள்ளிரவு முதல் 72 மணிநேரம் வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். 


  • ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர், ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, பான் கார்டு, அரசு அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை ஆகியவைதான் அடையாள அட்டைகளாக ஏற்கப்படும். 


கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in, www.finmin.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம் 

பணப் பரிமாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள எண்: 022 22602201/022 22602944.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்வது எப்படி? என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகிறது.

இந்தியா முழுவதும் நேற்று இரவு திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவைகளை நாளை (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 30-ந் தேதிக்குள் தங்களது வங்கிகள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யலாம்.

அதேபோல ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக்கொள்ளவும் முடியும். 24-ந் தேதி வரை ஒருவர் ஒருசமயத்தில் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும்.

டிசம்பர் 30-ந் தேதிக்குள் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலாதவர்கள் ரிசர்வ் வங்கியில் ஒரு பிரகடனம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அதற்கு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து இந்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியா நேர்மையான, ஊழலற்ற நாடாக விளங்குவதற்காக அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. ரிசர்வ் வங்கி 10-ந் தேதி (நாளை) முதல் இவைகளை வெளியிடுகிறது. இந்த நடவடிக்கை நாட்டின் நிதி மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு உதவும்.

உங்களை வேறு யாரும் கள்ளத்தனமான பணத்தை மாற்றிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள். இரவுக்கு பின்னர் ஒருவர் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவது அவர்களது பொறுப்பு தான். புதிய 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டை படமும், புதிய 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் படமும் பொறிக்கப்பட்டு இருக்கும். கண் பார்வையற்றவர்களும் இந்த நோட்டுகளை அடையாளம் காணும் வகையில் அடையாள குறியீடுகள் இருக்கும்.

இந்த மாற்றங்களின் மூலம் இந்தியாவில் 1,000 ரூபாய் நோட்டுகள் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லும்?

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனை உள்ள சில இடங்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரு தினங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:-

அரசு மருத்துவமனைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 11-ம் தேதி வரை வாங்கி கொள்வார்கள்.

அஞ்சலகங்களிலும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகளாக மாற்றலாம்.

நவம்பர் 11-ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் ரயில் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டு செல்லும்

விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் மையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 11-ம் தேதி வரை செல்லும் 

ரயில் டிக்கெட் புக்கிங், அரசு பேருந்து மையம் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பால் நிலையங்களில் நோட்டுகள் பெறப்படும்.


பிரதமர் அறிவிப்பு எதிரொலி: ஏ.டி.எம். மையங்களில் அலைமோதும் கூட்டம்

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், வங்கிகளில் டிசம்பர் 30-ம் தேதிக்குள் டெபாசிட் செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளில் மட்டும் 11ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நோட்டுக்கள் 10-ம் தேதி புழக்கதிற்கு வருகிறது. இந்த நடைமுறைகள் அமலுக்கு வருவதையொட்டி, நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 9, 10) ஏ.டி.எம். மையங்கள் செயல்படாது. வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ன. 

இந்த முடிவு யாருக்கும் தெரியாது என்றும், இது மிகவும் சாதகமான நடவடிக்கை என்று பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் புதிய எண்களுடன் கூடிய 10, 20, 100 மற்றும் 1000 நோட்டுக்கள் கூடுதலாக அச்சிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் பொதுமக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் நாளை காலையில் அத்யாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். சிறிய பெட்டிக்கடை, பால் கடை முதல் பலகாரக் கடை வரையில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதை தவிர்ப்பார்கள். எனவே, 100 ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக பொதுமக்கள் ஏடிஎம் மையங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனால், ஏடிஎம் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த அறிவிப்பினால் வங்கிகள் விடுமுறை : 

வங்கிகள், ஏடிஎம் இயந்திரங்கள் மூடல்.. பண பரிமாற்றத்தில் அதிரடி கட்டுப்பாட்டு.. ஆர்பிஐ அறிவிப்பு..! நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. ஏடிஎம் இயந்திரமும் இயங்காது. பண பிரமாற்றங்கள் அதிகளவில் முடக்கம்

மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என நவம்பர் 8ஆம் தேதி இரவு அறிவித்த உள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் அதிர்ந்துபோய் உள்ளனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி மக்களின் அன்றாட பண புழக்கத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

வங்கிகள் விடுமுறை : 

புதன்கிழமை (நவம்பர் 9ஆம் தேதி) இந்தியாவில் தனியார், பொதுத்துறை, கூட்டுறவு, கிராம மற்றும் ஊரக வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ஏடிஎம் இயந்திரங்கள்: 

அதேபோல் ஏடிஎம் இயந்திரம், பணம் டெப்பாசிட் செய்யும் இயந்திரம் என அனைத்தும் இன்று செயல்படாது. ஆனால் இணையம் மற்றும் மொபைல் வங்கியியல் இயங்கும்.

வங்கிகளின் உள் வேலைகள் : 

வங்கிகள் இன்று ஒரு நாளுக்குள் தனது கஜானா மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் வேலைகளைச் செய்ய உள்ளது.

2,000 ரூபாய் மட்டுமே.. அதன்பின் நவம்பர் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஏடிஎம் இயந்திரங்களில் வெறும் 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் நவம்பர் 19ஆம் தேதி முதல் இந்த அளவுகோல் 4000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது

வங்கியில் பணம் எடுத்தல்: 

மேலும் வங்கி வைப்புக் கணக்கில் இருந்து வித்டிரா அளவு நவம்பர் 9ஆம் தேதி முதல் ஒரு நாளுக்கு 10,000 ரூபாயாகவும், ஒரு வாரத்திற்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே அனுமதி அளிக்கிறது.

ஆர்பிஐ: 

 நவம்பர் 10ஆம் தேதி முதல், கார்பரேட் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனகள், அறக்கட்டளைகள், என அனைத்துத் தரப்பினரும், தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு ரிசர்வ் வங்கி கிளையிலும் மொத்தமாக மாற்றிக்கொள்ளலாம். மாற்றப்படும் தொகை அவர்களது வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகள் மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் மட்டும் அல்லாமல் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை முழுமையாகக் குறைக்க முடியும்

இன்று முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது : நோட்டுகளை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் : பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி:  நவம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் டெல்லியிலிருந்தபடி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக திடீரென உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது இந்த அறிப்பை வெளியிட்டார்.

ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், எனவே இன்று அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன், அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், அரசு ஆஸ்பத்திரிகள், ஏர்போர்ட், ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது : நோட்டுகளை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் : பிரதமர் மோடி அறிவிப்பு
இன்று முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது : நோட்டுகளை மாற்ற மார்ச் 31 வரை அவகாசம் : பிரதமர் மோடி அறிவிப்பு

இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மக்கள் தங்களிடமுள்ள 500 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதேநேரம், சில காரணங்களால் அதற்குள் மாற்றிக்கொள்ள இயலாதவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் நோட்டுக்களை மாற்ற அவகாசம் தரப்படும். தக்க அடையாள அட்டைகளை காண்பித்து பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

 அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டுக்களை அரசு 10ம் தேதி முதல், வங்கிகள், அஞ்சலகங்கள் மூலமாக சப்ளை செய்ய உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே கள்ள நோட்டு புழக்கத்தையும், பண பதுக்கலையும் தடுக்க முடியும் என கூறப்படுகிறது. ரூ.2000 நோட்டுக்களில் அதிநவீன லேயர்கள் இருப்பதால் செயற்கைக்கோள் மூலமாக கூட அவற்றை கண்காணித்து பதுக்கலை தடுக்க முடியும் என்று ஒரு தகவல் உலவி வரும் நிலையில் பிரதமர் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் : 

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்கள்கூட இந்த அறிவிப்பால் குழம்பி போய் உள்ளனர். தங்களிடம் உள்ள நோட்டுகளை எங்கு மாற்றுவது என்ற விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் சரியாக சென்றடையாத காரணத்தால் அவர்கள் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில மையங்களில் பணம் நிரம்பியதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக ஏற்படும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் மாற்றுவது தொடர்பாக சந்தேகங்களுக்கு 02222 602201, 02222 602944 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தொலைபேசி எண்கள் இன்று காலை 8 மணி முதல் 15 நாட்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இனி கருப்பு பணம், கள்ள நோட்டை ஒழிக்க அதிரடி நடவடிக்கை : 

இந்தியாவில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் இன்று முதல் செல்லாதவையாகிவிட்டன. பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய் இரவு சுமார் 8.15 மணிக்கு டிவியில் தோன்றி நாட்டு மக்களை நோக்கி உரை நிகழ்த்தினார். அப்போது, ஊழல், கருப்பு பணம், தீவிரவாதம் ஆகியவை நாட்டின் எதிரிகள் என்றும், அவற்றை வேரறுக்க தனது அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கருப்பு பணம், கள்ள நோட்டை ஒழிக்க அதிரடி நடவடிக்கை

வறுமை, ஏழ்மையை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறிய மோடி, நவம்பர் 8ம் தேதி (அதாவது நேற்று) நள்ளிரவு 12 மணியோடு, தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவையாகிவிடும் என்று, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 10ம் தேதி வியாழக்கிழமை முதல், டிசம்பர் 30ம் தேதிவரை, அனைத்து வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களிலும் தற்போதுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை கொடுத்துவிட்டு, அரசு புதிதாக வழங்க உள்ள ரூ.500 அல்லது ரூ.2000 நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார். ஒருவேளை டிசம்பர் 30ம் தேதிக்குள் பணத்தை மாற்ற இயலவில்லை எனில் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி நோட்டுக்களை மாற்றும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம்.

புதன்கிழமையான இன்று நாடு முழுக்க வங்கிகள், ஏடிஎம்கள் மற்றும் அஞ்சலகங்கள் செயல்படாது எனவும், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்வதில் பாதிப்பு இல்லை எனவும், மோடி தெரிவித்தார். புதிய ரூ500, ரூ2000 நோட்டுகளை வங்கிகளில் சேர்க்க இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை ஒரு சில இடங்களில் மட்டும் ஏடிஎம் செயல்படாது, பெரும்பாலான பகுதிகளில் செயல்படும். பிரதமரின் இந்த அறிவிப்பால் நேற்று இரவே வங்கி ஏடிஎம்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.100 முக மதிப்பில் பணத்தை எடுத்துக்கொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்டியதால் நீண்ட கியூ காணப்பட்டது. கருப்பு பண முதலைகளை சிக்க வைக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை என்று ஒரு தரப்பும், இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று மற்றொரு தரப்பும் சமூக தளங்களில் மோதிக்கொண்டுள்ளனர்.

பண நோட்டுகளை மாற்றும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை : ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் :

தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததும், மக்கள் பணபரிவர்த்தனை செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் இதுதான்:

*ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள் 10ம் தேதி முதல் கூடுதல் நேரம் திறந்திருக்கும். 

*வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம். ரூ.4 ஆயிரத்திற்கு மேல் தொகை என்றால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில்தான் டெபாசிட் செய்யப்படும்.

பணம் பரிவர்த்தனை செய்ய அடையாள அட்டை கட்டாயம். இன்டெர்நெட் வழியிலான பண பரிவர்த்தனைக்கு எந்த தடையுமில்லை. 

*வரும் 18ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ரூ.2000ம் மட்டுமே வங்கியில் எடுக்க முடியும்.,19ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வங்கியில் எடுக்கலாம். 

*அனைவரும், வங்கி கணக்கு வைத்திருப்பது அவசியமாகிறது. அப்படியானால்தான், ரூ.4000த்துக்கும் மேற்பட்ட மதிப்பில் பணத்தை மாற்றும்போது வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய முடியும்.

*நேரில் வந்து பணத்தை மாற்ற முடியாதவர்கள் அத்தாட்சி கடிதம் மூலமாக தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி பணத்தை மாற்றம் செய்துகொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. வங்கி மூலமாக பண பரிவர்த்தனைகள் நடந்தால்தான் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும் என்பது அரசின் நோக்கம் என கூறப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு நிதி அமைச்சகத்தின், http://finmin.nic.in/ என்ற வெப்சைட் முகவரியை பார்க்கலாம். மேலும், 02222 602201,02222 602944 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

ரூ500,ரூ 1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு மாற்ற முடியும்? நீங்களே வங்கிக்கு போக வேண்டுமா? 

ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இவை. 

சென்னை: கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இனி உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை எப்படி மாற்றுவது என யோசிக்கிறீர்களா? அல்லது மாற்றுவதற்கு வங்கிக்கு செல்லப் போகிறீர்களா? 

பண நோட்டுகளை மாற்றும் போது மக்கள் கவனிக்க வேண்டியவை : ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்

ரிசர்வ் வங்கியின் விரிவான விளக்கத்தை பாருங்கள்: 

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கவே ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் அறிவிப்பால் இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாதவையாகிவிட்டன. அதே நேரத்தில் உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான பணத்தை புதிய ரூ 500, ரூ 2,000 மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்கள், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு வங்கி கிளை அல்லது தலைம அஞ்சலகம் அல்லது கிளை அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். 

உங்களிடம் உள்ள ரூ500, ரூ1,000 நோட்டுகளுக்கு சமமான இதர ரூபாய் நோட்டுகள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.

உங்களிடம் உள்ள அனைத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை உடனே மாற்றிவிட முடியாது. அதிகபட்சமாக ரூ4,000 வரைதான் உங்களால் ரொக்கமாக மாற்ற முடியும். ரூ4,000க்கு மேல் மாற்ற வேண்டும் எனில் அந்த தொகை உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். 

ரூ4,000க்கு மேல் உங்களுக்கு தேவை இருப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றி செக் அல்லது நெட்பேங்கிங் அல்லது கிரெடிட்டெபிட் கார்டுகள் மூலம் பயன்படுத்தலாம்.

உங்களிடம் வங்கிக் கணக்கு இல்லையெனில் உரிய ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கணக்கை தொடங்கலாம்.

 ரூ4,000 வரை பணத்தை மாற்றுவதற்கு நீங்கள் நேரடியாக உரிய அடையாள அட்டையுடன் வங்கிக்கு நேரடியாக செல்லலாம். எந்த ஒரு வங்கியின் கிளைக்கும் சென்று நீங்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

 நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலையில் எழுத்துப்பூர்வமான அத்தாட்சி கடிதத்தை உரிய அடையாள அட்டைகளுடன் கொடுத்தனுப்பியும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். நீங்களே நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும். 

ஏடிஎம்கள் இன்று இயங்காது. ஏடிஎம்கள் செயல்பட தொடங்கும் நிலையில் நவம்பர் 18-ந் தேதி வரை உங்களால் அதிகபட்சமாக ரூ2,000 மட்டுமே எடுக்க முடியும். 

நவம்பர் 19-ந் தேதி முதல் ஏடிஎம்களில் ரூ4,000 வரை ஒருநாளுக்கு அதிகபட்சமாக எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை நீங்கள் அதிகபட்சமாக ஒருநாளைக்கு ரூ10,000 வரை மட்டுமே எடுக்க முடியும். 

வங்கிகளில் இருந்து நவம்பர் 24-ந் தேதி வரை ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ20,000 வரை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். நவம்பர் 24-ந் தேதிக்கு பின்னரே இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும்.

ஏடிஎம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ500, ரூ1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும். ரூ500, ரூ1,000 நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். வர்த்தக ரீதியாக வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகியற்றில் டிசம்பர் 30-ந் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். 

டிசம்பர் 30-ந் தேதிக்குள் உங்களால் தவிர்க்க இயலாத காரணங்களால் மாற்ற முடியாமல் போனால் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களை காண்பித்து மார்ச் 31-ந் தேதி வரையும் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற முடியும்.

நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உரிய ஆவணங்களுடன் அத்தாட்சி கடிதம் ஒன்றை உறவினர்களிடமோ நண்பர்களிடமோ அலுவலக பணியாளர்களிடமோ கொடுத்து பணத்தை மாற்ற முடியும். 

நீங்கள் சுற்றுலா பயணியாக இருந்தால் விமான நிலையங்களில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்ற முடியும். அரசு மருத்துவமனைகளில் கட்டண்ம செலுத்தவும், அரசு பேருந்து டிக்கெட்டுகள், ரயில் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றை பெறவும் நள்ளிரவு முதல் 72 மணிநேரம் வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். 

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர், ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, பான் கார்டு, அரசு அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை ஆகியவைதான் அடையாள அட்டைகளாக ஏற்கப்படும். 

கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in ; www.finmin.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம் 

பணப் பரிமாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள எண்: 022 22602201/022 22602944

Mega Job Fair 2016 : Voorhees College in Vellore City in Tamil Nadu

Mega Job Fair 2016 : Voorhees College in Vellore City in Tamil Nadu

In Vellore City, Mega Job Fair in Voorhees College Held on 13 - NOvember - 2016 in Vellore Distirct in Tamil Nadu.


Mega Job Fair 2016 : Voorhees College in Vellore City in Tamil Nadu
Mega Job Fair 2016 : Voorhees College in Vellore City in Tamil Nadu

Place : Voorhees College [Caub Hall]
LandMark : Offers Line, Vellore - 632001.
Date : 13 - 11 - 2016 [Sun Day]
Time : 08.30 AM To 05.00 PM
Organized by : Lions Club of Vellore & Restless Development
Company Participation : Top MNC Companies from Chennai, Kovai, Ranipet, Vaniyampadi, Ambur & Hosur.
Contact Number : +91 - 9944884780

website : http://www.velloreinformation.in

Monday, November 7, 2016

TNPSC Group 4 Exam 2016 : Question Paper Answer Key Download Online

In Group 4 examination, the total number of posts is more than any of the examination conducted in Tamilnadu State. The TNPSC recruitment board initially announced the last date for the online application on 9th September 2016. 

Many candidates missed to apply for the TNPSC Group 4 exam before the last date of the online application. Due to the high amount of the response for this Group 4 examination, earlier the TNPSC recruitment board extended the last date for the online application till 15th September 2016. Read the full post to know more about the TNPSC examination 2016.

TNPSC Group 4 Exam 2016 : Question Paper  Answer Key
TNPSC Group 4 Exam 2016 : Question Paper  Answer Key

Friday, November 4, 2016

திருமண தடை நீக்கும் உத்திர ரங்கநாத பெருமாள் கோவில் பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவில் இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதலமாகும். நீண்டகாலம் திருமணம் தடைபட்டவர்கள், இந்த கோவிலுக்கு வந்து வேண்டிசென்றால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திருமண தடை நீக்கும் உத்திர ரங்கநாத பெருமாள்
திருமண தடை நீக்கும் உத்திர ரங்கநாத பெருமாள் கோவில்

தென் தமிழகத்தின் ஸ்ரீரங்கம் போல, வடதமிழகத்தின் புகழ்மிக்க ஆலயமாக திகழ்வது, பாலாற்றின் ஓரம் உள்ள உத்திர ரங்கநாதர் கோவில். பிரம்மனின் யாகத்தைக் காத்தருளியவர் இந்தப் பெருமாள். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள இந்த ஆலயம், இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதலம், ஆண்டாளை மணம் முடித்தது போல், பள்ளிகொண்டாவில் செண்பகவல்லியை மணம் புரிந்த தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக திகழ்கிறது.

புராண வரலாறு :

இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நாரதர், பிருகு மகரிஷிக்கு இரண்டு அத்தியாயங்களாகக் கூறப்பட்டுள்ளது. காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது என பள்ளிகொண்டை எனும் உத்திரரங்கஷேத்திர புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகொண்டா ரங்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்த பிரம்மா, யாகம் செய்ய விரும்பினார். அதற்கான இடத்தைத் தேடினார். முடிவில் வேறு இடங்களில் நூறு யாகங்கள் செய்வதைவிட, சத்யவிரத ஷேத்திரம் எனும் காஞ்சீபுரத்தில் செய்வதே சாலச் சிறந்தது என்று தீர்மானித்தார்.

இந்த நிலையில் சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் தங்களுள் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. இதற்கான பஞ்சாயத்து பிரம்மாவிடம் வந்தது. பிரம்மா, லட்சுமியே உயர்ந்தவள் என்று கூறினார். கோபம் கொண்ட சரஸ்வதி அங்கிருந்து, மேற்கேயுள்ள நந்திதுர்க்க மலைக்குச் சென்றாள்.

ஆனால் காஞ்சீபுரத்தில் தான் செய்யவிருக்கும் யாகத்திற்கு, தம்பதி சமேதராய் செல்ல வேண்டும் என்பதால் சரஸ்வதியை அழைத்தார் பிரம்மா. ஆனால் அவர் உடன் வர சம்மதிக்கவில்லை.

எனவே, சாவித்திரி என்ற பெண்ணை உருவாக்கி, அவளை மணம்புரிந்து யாகத்தைத் தொடங்கினார் பிரம்மா. இதைக் கேள்வியுற்ற சரஸ்வதி, பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுத்து, ஷீர நதி எனும் பாலாற்றில் பாய்ந்து, யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதையறிந்த பிரம்மா ஸ்ரீமன் நாராயணனிடம் தஞ்சம் புகுந்தார். அவரது வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெருமாள், பள்ளிகொண்டா, திருப்பாற்கடல், காஞ்சீபுரம் என மூன்று இடங்களில் பாலாற்றை வழிமறித்து வெள்ளத்தைத் தடுத்து, பிரம்மாவின் யாகத்தைக் காத்தருளினார். பள்ளிகொண்டாவில் சயனம் செய்த பெருமாள், பள்ளிகொண்டான் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.

சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் மணம் புரிந்ததுபோல, பள்ளிகொண்டாவில் சம்பாதிமுனிவர் விருப்பப்படி, செண்பகவல்லி என்ற பக்தையை பங்குனி உத்திர நாளன்று திருமால் மணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது.

கல்வெட்டுகள் :

1925-ம் ஆண்டு இந்தியத் தொல்லியல்துறை ஆய்வறிக்கையின்படி, இத் தலத்தை பற்றிய 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 18 கல்வெட்டுகள் உத்திர ரங்கநாதர் ஆலயத்திலும், மூன்று கல்வெட்டுகள் நாகநாதீஸ்வரர் கோவிலிலும், ஒரு கல்வெட்டு செல்லியம்மன் கோவிலிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.848), முதலாம் பராந்தகன் (கி.பி.926), முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), இரண்டாம் ஜடாவர்மவீரப் பாண்டியன் (கி.பி.1306), குலசேகரசம்புவராயன் (கி.பி.1307) போன்ற மன்னர்களின் கொடைகளையும், நிலதானங்களையும் எடுத்துரைக்கிறது.

ஆலய அமைப்பு :

பாலாற்றின் தென்கரையில், கிழக்கு முகமாய் அமைந்துள்ளது இந்த ஆலயம். ஐந்து நிலை ராஜகோபுரம், அதன் எதிரில் நான்கு கால் ஊஞ்சல் மண்டபம், இடது புறம் வியாசர் புஷ்கரணி என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. இரண்டு திருச்சுற்றுக்களைக் கொண்டதாக அமைந்துள்ள கோவில் கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலி பீடம் காட்சியளிக்கின்றன. இதனையடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம் உள்ளன.

வெளிச்சுற்றில் ராமானுஜர், ராமர், கண்ணன், ஆண்டாள், தலமரங்களான பாதிரி, பாரிஜாதம், கருடாழ்வார், எம்பெருமான் திருவடி, சொல்லின் செல்வனான வீர அனுமன் அருகே பக்த அனுமன், மணவாளமாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன.

மகாமண்டபத்தில் இடதுபுறம் உற்சவமூர்த்திகள் 12 ஆழ்வார்களும் திருமுகம் சாதிக்கின்றனர். இது தவிர, பிள்ளைலோகாச்சார்யார், முதலியாண்டான், மணவாளமாமுனி, ஆளவந்தார், நவநீதகண்ணன் ஆகிய திருமேனிகள் கலைநயத்துடன் காட்சி தருகின்றன. இதில் கண்ணன் திருமேனி மிகவும் கலை அம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.

மூலவர் பள்ளிகொண்ட பெருமாள், தெற்கே தலை வைத்து, வடக்கே தன் திருப்பாதங்களைக் காட்டி, பாம்பணையின் மீது எழிலாகப் பள்ளிகொண்டுள்ளார். அவரின் திருமார்பில் திருமகளும், கொப்பூழ் தாமரையில் நான்முகனும், அருகே ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்துள்ளனர். எம்பெருமானின் திருக்கரம் பக்தர்களை ‘வா’ என்று அன்போடு அழைக்கும் கோலத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் அதேப் பொலிவுடன் எம்பெருமான் காட்சி தருகின்றார்.

தாயார் ரங்கநாயகி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அழகுற அருளாசி வழங்குகிறாள்.

உத்திரரங்கநாதர் :

தெற்கே ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள எம்பெருமான் ஸ்ரீரங்கநாதர் என்பதுபோல, வடக்கே பள்ளிகொண்டுள்ள இத்தல பெருமாள், உத்திர (வடக்கு) ரங்கநாதர் என அழைக்கப்படுகிறார். இவர் சின்னஞ்சிறு வடிவில் சயனித்துள்ளதால் பாலரங்கநாதன் என்றும் பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். மகாமண்டபத்தில் கஸ்தூரிரங்கன் எனும் சோட்டாரங்கநாதர் வடிவமும் தனியே அமைந்துள்ளது. இவரே அன்னியப் படையெடுப்பின் போது மூலவரைக் காத்தவர் என வரலாறு கூறுகிறது.

பிரம்மஹத்தி தோஷம் :

திரேதாயுகத்தில் தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியோடு வனத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது கிளி வடிவில் கூடியிருந்த ரிஷிகளை கொன்றான். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் வேண்டி நின்ற இந்திரன், காச்சயப்ப முனிவர் அறிவுரைப்படி, பள்ளிகொண்டா தலத்து வியாச புஷ்கரணியில் நீராடி, ஓராண்டு காலம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதரைத் தரிசித்து, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. 

பரிகாரத் தலம் :

இத்தலம் பதினாறு வகை செல்வங்களையும் அள்ளித் தரும் தலமாகப் போற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருமணப்பேறு வழங்கும் தலமாக திகழ்வதால், இங்கே திருமண வைபவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. நீண்டகாலம் திருமணம் தடைபட்டவர்கள், இங்கு வந்து வேண்டிசென்றால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

தலமரம் பாதிரி மற்றும் பாரிஜாதம் ஆகும். தல தீர்த்தமாக வியாசர் புஷ்கரணி எனும் திருக்குளம் உள்ளது. ஆலயத்தின் அருகே ஓடும் நதி ‘ஷீரநதி’ அல்லது ‘பத்மினி’ எனும் பாலாறாகும். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

விழாக்கள் :

இந்த ஆலயத்தில் சித்திரையில் பத்து நாட்கள் பிரமோற்சவப் பெருவிழா நடைபெறுகிறது. இது தவிர, வைகாசியில் விசாககருட சேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம், ஆடியில் பூரம், நான்காம் வெள்ளி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபத் திருவிழா, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தனுர் மாத பூஜை, தை மாதத்தில் கிரிவலம், மாசியில் தெப்பல் உற்சவம், பங்குனியில் உத்திரம், பெரியபிராட்டியார் உற்சவம் என விழாக்களுக்குப் பஞ்சமில்லை.

காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.

அமைவிடம் :

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டத்தில் பாலாற்றின் தென்கரையில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. தெற்கே பீஜாசலம் எனும் வித்துமலை இருக்கிறது. சென்னைக்கு மேற்கே 150 கிலோமீட்டர், வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில், வேலூருக்கு மேற்கே 23 கிலோமீட்டர், ஆம்பூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர், குடியாத்தத்திற்குத் தென்கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், பள்ளிக்கொண்டான் ஆலயம் உள்ளது.